வாழும் காலம்!
உயர்ந்த மனிதர்கள் உடலால் மட்டுமே சாகிறார்கள்! அவர்கள் சொன்ன கருத்துக்களின்மூலம் என்றென்றும் வாழ்கிறார்கள்!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
============================================================================
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நல்லவர்களின் அரசியல்
நமது நாட்டில் நல்லவர்கள் அரசியலுக்கு வரமாட்டேன் என்று இருப்பதாக நிறையப்பேர் நினைக்கிறார்கள்!
யார் சொன்னது வரமாட்டேன் என்று சொன்னார் என்று?
அவர்கள் தங்கள் கடமையைச் செய்துகொண்டுதான் உள்ளார்கள்.
ஆனால் மக்களின் அறியாமையால் சாக்கடையைச் சந்தானம் என்றும் சந்தனத்தைச் சாக்கடைஎன்றும் நினைத்து சாக்கடையைப் பூசிக்கொண்டு உள்ளார்கள்!
சந்தனத்தின் அருமையை உணரும்போதுதான் உண்மை வெளிப்படும்.
அதுபோல நல்லவர்களின் அருமை உணரப்ப்படும்போதுதான் அவர்கள் என்ன செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------==============================================================================----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சரியான அரசியல்
நமது நாட்டில் அரசியல் என்றால் அது அயோக்கியத்தனம் என்று மக்கள் நினைக்கும் அளவு அரசியல் மோசமாகிவிட்டது.
அதனால் பெரும்பாலானவர்கள் அரசியல் சீர்கேடுகளை எதிர்த்துக் குரல் கொடுப்பதையும் மோசமான அரசியலையும் ஒரேமாதிரிப் பார்க்கிறர்கள்!
அது சரியான பார்வை அல்ல! அது தீயவர்களுக்குத்தான் பயன்படும்.
நோய்களுக்கும் மருத்துவத்துக்கும் வேறுபாடு இல்லையென்றால் நோய்க்கு மருத்துவம் பார்க்க முடியாது.
நோய்க்கு மருத்துவம் தேவையில்லை என்றால் நோய்களை அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.
எந்த மருத்துவம் செய்தாலும் நோய் குணமாகாது என்று சொல்வது நோயைக் குணப்படுத்தும் வழி அல்ல!
ஆனால் அப்படிச் சொல்வது நோயைவிடத் தவறானது என்று நிறையப்பேர் விபரம் அறிந்தவர்களே உணராமல்போனதுதான் பெருநோய்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------============================================================================
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அருமையான கருத்துக்கள் சார் ! நன்றி !
ReplyDeleteநன்றி நண்பரே!
Delete