வேம்பும் காக்கையும்
நண்பர்களே!
வேப்பமரத்துக்கும் காக்கைகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.
காக்கைகள் இதன் பழத்தை நிறையத் தின்றுவிட்டு ஆங்காங்கே எச்சமிடுவதால் மீண்டும் மீண்டும் முளைத்து மரங்களாகின்றன.
நாம் செய்யவேண்டிய வேலையைக் காக்கைகள் செய்து விடுகின்றன.
அதனால் வேம்புமட்டும் நிறையக் காணப்படுகிறது!
ஆனால் சமீப காலங்களில் காக்கைகள் குறைந்து வருவதுபோல் உள்ளது.
அப்படிக் காக்கைகள் குறைந்தால் வேப்பமரங்களும் குறைந்துவிடும்!
காக்கைகளைக் காப்பாற்ற இதுவும் ஒரு முக்கியக் காரணமாக நினைக்கப்படவேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
======================================================================
=======================================================================
கள்ளி
======
இது ஒரு சிறந்த மூலிகைத் தாவரம் ஆகும். மரம்போல் உயரமாகவும் புதர்போலவும் வளரக்கூடியது. மூலிகைப் பண்பு மிக்கது.
இதனை உணவுக்காகவோ உள்ளுக்குச் சாப்பிடும் மருந்தாகவோ பயன்படுத்தமுடியாது. காரணம் இது அமிலத்தன்மையும் விஷத் தன்மையும் உடையது. வெளிப்புறமாகப் பூச்சு வைத்தியமாகவும் ஆவியில் கொதிக்கவைத்து ஒத்தனம் கொடுக்கும் வைத்தியமாகவும் சிறந்த பயனளிக்க் கூடியது.
இது முன்னர் மானாவாரி விவசாயிகளின் விவசாயத்துக்கு சிறப்பாக உதவி வந்துள்ளது.
இதனை நிலத்தைச் சுற்றிலும் வேலியாக நட்டு வளர்த்திருப்பார்கள்.
இது வேலியாகப் பயன்படும் அதே நேரம் அதன்மேல் பிரண்டை, கோவை, வேலிப்பருத்தி போன்ற அருமையான மூலிகைக் குணமுள்ள தாவரங்கள் நன்கு படர்;ந்து வளரும். அவை முலிகையாகவும் உணவாகவும் நமக்குப்பயன்படும் அதேநேரம் கால்நடைகளுக்கும் மிகச்சிறந்த தீவனமாகும்.
கள்ளியின் இளம் மடல்கள்கூட வரண்ட காலங்களில் வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப்பயன்படும்.
இவற்றின்மேல் பல்வகைத்தாவரங்கள் படர்ந்து வளருமாதலால் அவை சில பறவையினங்களுக்கும் ஓணான் பச்சோந்தி பாம்புகள் போன்றனவற்றுக்கும் வாழ்விடங்களாகப் பயன்படுகிறது.
முன்னர் கிராமப்புற மக்கள் இந்தக் கள்ளியின் காய்ந்து கிடக்கும் மடல்களை விறகுக்காகவும் பயன்படுத்துவர்.
கிராமப்புற விவசாயியின் இணை பிரியாத நண்பனாக இருந்த இது தற்காலம் பழக்கத்திலிருந்து வெகுவாக ஒழிக்கப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கும் இடங்களிலும் மலைப் பிரதேசங்களிலும்தான் இப்போதும் உள்ளது.
கடும் வரட்சியைத் தாங்கி நின்று மனித இனத்துக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும் இவை போன்றவற்றை ஒழித்துக்கட்டுவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதுதான் நாம் உணரவேண்டிய ஒன்று.
No comments:
Post a Comment