கிராம வாழ்க்கை
நண்பர்களே! ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
ஆதாவது கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயம் செய்யாத,தெரியாத நண்பர்களும் உறவுகளும் நகர்ப்புறங்களில் உண்டு.
கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள், கிடாய்வெட்டு போன்றவற்றுக்கு போகும் இவர்கள் மிகவும் மகிழ்ந்து போகிறார்கள்.
அவர்கள் காட்டும் அன்பு, கிராமிய மணம், இயற்கைச் சூழல், கால்நடை, கிணறு, தண்ணீர், இளநீர், கிடாய்வெட்டு விருந்து இவற்றில் லயித்து மனதைப் பரி கொடுக்கிறார்கள்.
விஷேச நாட்களில், விருந்தினர் உள்ள நாட்களில் அவர்கள் இவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதை அவர்களின் தினசரி வாழ்க்கை முறை என்று நம்பி விடுகிறார்கள்!
அந்த இயற்கைச் சூழலை இவர்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்களோ அப்படிப்பட்ட மனநிலையில் கிராமத்தவர் எப்போதும் இருப்பதாக எண்ணுகிறார்கள்.
இயற்கை சுற்றுச் சூழலைப் பற்றிய இவர்கள் பார்வையும் கிராம மக்களின் அனுபவமும் வேறானது என்பதைக் காணத் தவறுகிறார்கள்!
அவர்களின் வாழ்க்கைச் சூழல் அத்தகைய ரசனையுடன் வாழ அவர்களை அனுமதிப்பதில்லை என்பதையும் காணத் தவறி விடுகிறார்கள்.
இயற்கை சுற்றுச் சூழலைப் பற்றிய இவர்கள் பார்வையும் கிராம மக்களின் அனுபவமும் வேறானது என்பதைக் காணத் தவறுகிறார்கள்!
அவர்களின் வாழ்க்கைச் சூழல் அத்தகைய ரசனையுடன் வாழ அவர்களை அனுமதிப்பதில்லை என்பதையும் காணத் தவறி விடுகிறார்கள்.
தங்கள் வருவாய் கூடுதலாக இருந்தாலும் கிராமத்தவர்போல் நிம்மதியாகவும் திருப்தியாகவும் தாங்கள் இல்லை என்று நினைக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக தாங்களும் விவசாயம் செய்தால் அப்படி அமைதியாக வாழலாம் என்றும் நினைத்து செயலிலும் இறங்கி விடுகிறார்கள்.
கிராமத்தில் நிலம் வாங்கி அதை அபிவிருத்தி செய்யவும் வரவு பார்க்கவும் படாதபாடு படுகிறார்கள்.
விவசாய அனுபவம் இல்லாததும் வேலை தெரியாததும் பெரிய பிரச்சினைகளாக முன் நிற்பதைப் பார்த்து வாடிப் போகிறார்கள்.
இந்த நினையில் எந்த உணர்வால் கிராமம் போகவேண்டும் என்று முடிவெடுத்தார்களோ அந்த உணர்வு பின்னுக்குப் பொய் சராசரி கிராம வாழ்க்கையைத்தான் அவர்களும் வாழும்படி ஆகிறது.
அதையும் தாண்டி சாதிப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலோர் தங்களது முடிவை எண்ணி வருத்தப்படவே செய்கிறார்கள்.
அதனால் கிராம மக்களைப் பற்றியும் கிராமிய வாழ்க்கையைப் பற்றியும் உண்மைக்கு மாறான கற்பனைகளை வளர்த்துக்கொண்டு செயலில் இறங்குவது சரியல்ல.
உண்மையான நிலைமைகளையும் தங்களின் வருங்காலத் தேவைகளையும் கணக்கில் கொண்டு திட்டமிட்டு முடிவெடுக்கவேண்டும். அதுதான் மிகச் சரியாக இருக்கும்!
No comments:
Post a Comment