கோரை உணவு
இப்போதெல்லாம் கோரை என்றால் குடியானவனுக்குக் குளிரும் காய்ச்சலும் வருவதுபோல் உள்ளது.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் கோரை மக்களுக்கு உணவாகவும் பயன்பட்டுள்ளது.
வறண்ட காலங்களில் விவசாயமும் விளைச்சலும் வேலையும் இல்லாதகாலங்களில் புஞ்சைக்காடுகளில் புழுதியில் மீண்டும் முழைப்பதர்க்கு மழையில்லாமல் இறைந்து கிடக்கும் கோரைக் கிழங்குகளைச் சேகரித்து கொண்டு வருவார்கள்.
அதை தரையில் பரப்பிப் பலகையால் தேய்ப்பார்கள்.
அதனால் கோரைக்கிழங்கின் மேல்பாகம் இருக்கும் தொட்டு நீக்கப்பட்டு வெண்மைநிறத்தில் சின்னவெங்காய வடிவிலும் தட்டைப்பயறு அளவுள்ளதாகவும் கிடைக்கும்.
அதை ஆட்டுக்கல்லில் போட்டு ஆட்டிக் கஞ்சியாகக் காய்ச்சிஉப்புப் போட்டுக் குடிப்பார்கள்.
தோசையாகச் சுட்டுத் தின்பவர்களும் உண்டு.
மழைக்காலங்களில் முழைக்கும் கோரைக்கிழங்கைக் குச்சியால் நோண்டி எடுத்து சிறுவர்கள் உண்பதும் அப்போது வழக்கத்தில் இருந்தது!
ஆனால் இப்போதெல்லாம் அந்த நல்ல கோரை அநேகமாக முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது.
அடர்ந்த களைகளாக முழைத்து விவசாயிகளுக்குத் தலைவலியாக இருக்கும் அத்துவானக் கோரைகள் மட்டுமே இப்போது விவசாய நிலங்களிலும் தரிசுகளிலும் உள்ளன.
காலத்துக்குத் தகுந்தபடிக் கோரைக்களும்கூட தங்களை மாற்றிக்கொண்டு விட்டது.
தெரியாத, தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்
ReplyDelete