ஊருக்கு உபதேசம்!
பற்றி எரிகிறது! ஓடிப்போய் அணையுங்கள் என்று சொல்வதைவிட ஓடிவாருங்கள் அணைப்போம் என்பதே உயர்ந்த முறை ஆகும்!
ஐயகோ!... பாவிகளே ! ஓடிப்போய் அணையுங்கள் என்று பிறருக்குமட்டும் சொல்பவர்கள் அறிந்தே சொல்கிறார்களா? அறியாமல் சொல்கிறார்களா?
கையாலாகாதவர்கள் அப்படிச் சொல்வதில் அர்த்தமிருகிறது. எல்லோரும் அப்படியே சொன்னால்....
தாங்கள் முற்றும் அறிந்தவர்கள் என்ற அறியாமையில் இருந்துதான் பிறருக்கு மட்டும் உபதேசம் செய்யும் அந்தப் பண்பு வருகிறது!
அதைக் கேட்பவர்களுக்கு கேட்க நன்றாக இருக்காது.
இந்த நோய் நிறையப்பேரிடம் உள்ளது!
அது தவிர்க்கப்படுவதே உயர் பண்பாகும்!
No comments:
Post a Comment