அறிவியல் - ஆன்மிகம் - மூடநம்பிக்கை
வாழ்க்கையில் அறிவியல் பயன்பாடுகள் அனைத்தையும் அனுபவிக்கிறோம்.
அறிவியல் மனிதனின் அறிவுக்கு எட்டிய எல்லைவரை அறிந்ததை விளக்குகிறது!
அதைச் சரியாகவோ தவறாகவோ பயன்படுத்தி ஒரு விதமான குழப்பமான வாழ்வை வாழ்ந்துகொண்டுள்ளோம்!
அறிவியல் சாதனங்களும் பயன்பாடுக்களும்தான் மனிதனால் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன.
அறிவியல் கோட்பாடுகள் தவறு செய்வதில்லை!
அதுதான் நம்மை அனைத்தையும் அறிய வைக்கிறது!
ஆனால் அறிவியலால் கற்றுக்கொண்ட அறிவை வைத்து ஏதேதோ கற்பனைகளை வளர்த்துக்கொண்டு அவையெல்லாம் அறிவியலைவிட மேலானது என்று சொல்வதன்மூலம் என்ன நன்மை கிடைக்கப் போகிறது?....
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதைத் தவிர!
அறிவியலுக்கும் மேலான ஒன்றை நாம் அறிந்துகொள்ள ஏதாவது உபாயம் இருக்கிறதா?.
அறிவியலும் ஆன்மிகமும் வேறு வேறு அல்ல! அறிவியல் இல்லாமல் ஆன்மிகம் இல்லை! ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து ஐயங்களும் தெளிவுகளும் அறிவியலில் இருந்தே பிறக்கின்றன.
அப்படிப் பிறக்காத கற்பனையான நம்பிக்கைகளைத்தான் மூட நம்பிக்கைகள் என்கிறோம்!
ஆன்மிகம் என்பது மூட நம்பிக்கை அல்ல! அபத்தமான கற்பனைகள்தான் மூட நம்பிக்கைகள்!
இல்லாத எதைஎதையோ கற்பனை செய்துகொண்டு அதையும் தத்துவங்கள்போல் நினைத்து இன்னதென்று அறியாமல் ஒருவரையொருவர் பாசாங்கு செய்வதில் என்ன இருக்கிறது?...
அவற்றை மூடநம்பிக்கை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்?...
எல்லையற்ற இயக்க ஆற்றலை இறை என்று வைத்து மற்ற அனைத்தும் அதன் அங்கமாக நினைத்து இணக்கமாக வாழ வழிகாட்டும் தத்துவங்கள்மட்டுமே உண்மையான ஆன்மிகம்!
மற்ற அனைத்தும் மக்களைக் கண்ணிருந்தும் குருடர்களாக வைத்திருப்பதும் வைத்திருக்க முயல்வதும் ஆன ஏமாற்றுப் புரட்டுக்களே!
No comments:
Post a Comment