தத்தம் நிலையில் தாம் பெரியவரே!
மனித இனத்தைப் பற்றி மனிதராகிய நாம்தான் சிறப்பித்து
சொல்லிக்கொள்ள முடியும்.
இயற்கையின் நோக்கில் அதற்கு எந்த அடிப்படையும் இல்லை!
மண்ணில் தோன்றிய எண்ணற்ற உயிரினங்களில் மனித இனமும் ஒன்று!
மற்றபடி அனைத்து உயிரினங்களும் தத்தம் நிலையில் தாம் பெரியவரே!
மனித இனம் தனக்கும் இயற்கைக்கும் தனக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள உறவைச் சரியாகப் புரிந்து சிறப்பாக வாழ்வதே தான் பரிணாம வளர்ச்சியால் பெற்ற கூடுதல் சக்திக்கும் தகுதிக்கும் பெருமை ஆகும்!
மனிதனின் புரிதல் என்பது மனிதத் தேவைகளை மட்டும் பிரதானமாகக் கொண்டது!
அனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது!
ஆனால் இயற்கையோ மற்ற உயிரினங்களோ மனித மதிப்பீட்டுக்கு மரியாதை அளித்துத் தங்கள் போக்கை மாற்றிக்கொள்வதில்லை.
அதனால் மனிதன் இயற்கையையும் பிற உயிரினங்களையும் அடக்கியாள்வதே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு அலைவது வாழ்வின் விதி ஆகி விட்டது!
அதன் தொடர்ச்சியாக அதே புத்தியைச் சக மனிதர்களின் மேலும் பிரயோகித்து ஒருவரையொருவர் நேசிப்பதற்குப் பதிலாகக் கொடூரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளார்கள்!
அதனால் அன்பு என்பது போலி முகமாகவும் கொடுமை என்பது உண்மைக் குணமும் ஆகிவிட்டது!
போலிக் குணம் உண்மைக குணமாக மாறும்போதுதான் மனித நாகரிகம் மரியாதைக்கு உரியது ஆகும்!
No comments:
Post a Comment