நன்மையையும் தீமையும்
நண்பர்களே!
ஒரு குறிப்பிட்ட பழத்தின் அல்லது காயின் பயன்களை சிறப்புக்களை அறிந்து கொள்வது நல்லதே!
ஆனால் ஒவ்வொன்றைப் பற்றியும் இன்னின்ன நன்மை இன்னின்ன தீமை என்று சொல்லப்படுகிறது!
அதற்கு முக்கனிகளும்கூட விதிவிலக்கல்ல!
ஆனால் நடைமுறையில் ஒவ்வொன்றையும் உண்பதால் என்னென்ன தீங்கு வரும் என்றெல்லாம் நினைத்து அச்சப்படவேண்டியது இல்லை!
காரணம் நாம் எப்போதும் தனியாக ஒன்றையே உண்பதில்லை!
வேறு வகைகளை உண்ணும்போது அவற்றில் கூடக்குறைய இருக்கும் சத்துக்கள் ஒன்றை ஒன்று சரி செய்துகொள்ளும்!
விளைவு நல்லதாகவே இருக்கும் !
இயற்கையின் போக்கு அத்தகையதே!
அதனால் நாம் எந்த ஒரு பழத்தையும் கண்டு அச்சப்படவேண்டியது இல்லை!
நோய் இல்லாத நிலையில் நாம் விரும்பும் காய் கனிகளை விரும்பும் அளவு உண்ணலாம்!
எதிர்மறையான எண்ணங்களை மனதில் வைத்திருந்தால் நமது விருப்பத்தின் சம நிலை பாதிக்கப்படும்!
இது அனைத்து வகையான உணவு வகைகளுக்கும் பொருந்தும்!
அதனால் மட்டுமே பாதிப்பு வரலாம்!
No comments:
Post a Comment