தோசையும் ஊத்தப்பமும்
நண்பர்களே!
இயற்கை உணவைத் தனியாக உண்டு வாழ கொஞ்ச காலம் ஆகலாம். தவறில்லை!
அதனால்தான் அதற்கு முன்னுரிமையும் வேக வைத்து எண்ணெய் சேர்க்காமல் சமைக்கும் உணவுக்கு இரண்டாமிடமும் கொடுக்கிறோம்.
மற்றவை படிப்படியாகத் தீங்கை நோக்கி வேகமாக நம்மை அழைத்துச் செல்பவை!
அதில் அதிகமான புழக்கத்தில் இருப்பது தோசை! ஸ்பெசல் தோசை!
அவை வீடுகளிலும் கடைகளிலும் அதிக மக்களால் உண்ணப்படுகிறது!
அவை எண்ணெயைப் பயன்படுத்தி தோசைக்கல்லில் சுட்டு எடுக்கப்படுகிறது!
அவை சுடப்படுவதால் இயற்கைப் பண்புகளுக்கு எதிரான பண்புகளை வெளிப்படுத்தினாலும் உடலுக்கு ஊறு விளைவித்தாலும் சுவையாலும் பழக்கத்தாலும் ஈர்க்கப்படும் மக்கள் முழுமையாக விடுபடுவது கடினமாக உள்ளது.
அத்தகைய நண்பர்களுக்கு ஒரு யோசனை!
தோசையோ, ஸ்பெசல் தோசையோ மெல்லியதாக முருகலாகச் சுட்டுச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
அதற்குப் பதிலாக கனமான ஊத்தாப்பமாக சுட்டுச் சாப்பிடலாம். ஊத்தப்பம் முருகலாகச் சுடப்படுவதைவிடத் தீங்கு குறைவானதாகும்.
காரணம் கனமாக மாவு ஊற்றிச் சுடப்ப்படும்போது கல்லில் சுடப்படும் பாகத்தைவிட சுடப்படாமல் அதில் இருக்கும் நீர்ப்பதத்தைக் கொண்டு வெந்து சமைக்கப்படும் பகுதி அதிகம் ஆகும்!
அதனால் வெளிப்பகுதி முருகலாகவும் உள்பகுதி பஞ்சு போன்றும் இருக்கும்.
அதன்மூலம் அதனால் விளையும் எதிர்மறையான பண்பு வெகுவாகக் குறைக்கப்படுகிறது!
எனவே தோசையையும் முறுகலான தோசையையும் தவிர்த்து ஊத்தப்பத்தை உண்பதே பயன்மிக்க முறை ஆகும்!
சப்பாத்தியும் கனமாகச் சுடுவதே நல்லது.
No comments:
Post a Comment