ஆயுள்
ஆயுள் என்பதை நாம் மட்டும் தீர்மானிப்பது இல்லை!
சூழ்நிலைகளும் தீர்மானிக்கின்றன!
அதுவும் நமது வாழ்க்கையைப் பற்றி நாம் முடிவெடுக்கும் வயதும் அறிவும் வரும்வரை ஆயுளைச் சூழ்நிலைகள் மட்டுமே தீர்மானிக்கின்றன!
அதன்பின்னும் ஆயுளை அதிகப் படுத்துவதன்மூலம் வாழ்க்கைப் பயனை நீட்டிக்க விரும்பி அதற்குத் தக்கபடி வாழமட்டுமே நமக்குச் சக்தியும் உரிமையும் உண்டு!
அந்த முயற்சி ஆயுளை நீட்டிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனாலும் சூழலின் பிடித்தான் வலிமையானது!
அதனால் நமது ஆயுளை அதிகப் படுத்தும் திசையில் கடமைகளைச் செய்யும் அதே நேரம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நமக்கும் நாம் வாழும் சமூகத்துக்கும் பயன்மிக்கதாக வாழ்வதே முக்கியம்!
காரணம் நாம் வாழும் காலம் முக்கியம் அல்ல!
நாம் வாழும் முறையே முக்கியம்!
No comments:
Post a Comment