சரியான பாதை!
நாட்டில் நடக்கும் அநேகம் தவறுகளுக்கு ஆட்சியாளர்களே பொறுப்பு!
ஆனால் அவர்கள் மட்டும் முழுக் குற்றவாளிகளா?
நிச்சயம் கிடையாது!
ஆட்சியில் உள்ளவர்கள் மக்களின் சராசரித் தகுதியைத்தான் பிரதி பலிக்கிறார்கள்!
காரணம் ஆட்சியாளர்கள் மக்களிடம் இருந்துதான் உருவாகிறார்கள்.
எனவே மக்களின் சராசரித் தகுதி மட்டம் உயருமளவே ஆட்சியாளர்களின் தரமும் உயரும்!
ஆனால் மக்களின் தரம் உயர்வது எப்போது? அதைத் தொடர்ந்து ஆட்சியாளர்களின் தரம் உயர்வது எப்போது?
யார் எப்படி இதைச் செய்வது என்பதுதான் முக்கியமான கேள்வி!
அதைச் செய்ய வேண்டியவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறார்கள்!
அத்தகையவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து வெளியில் வரவேண்டும்!
அரசியல் விழிப்புணர்வற்ற மக்களோ, அவர்களின் அறியாமையையும் இயலாமையையும் பயன்படுத்தி மோசடி அரசியல் நடத்தும் கட்சிகளோ அரசுகளோ நாட்டை எப்போதும் காப்பாற்றப் போவதில்லை! முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லப்போவதும் இல்லை!
அப்படிக் காப்பாற்றத் தகுதியுள்ள தேசப் பற்றாளர்கள் நம்பிக்கை இல்லாமல் தானுண்டு தங்கள் வேலையுண்டு என்று அக்கிரமத்தைக் கண்டும் காணாதவார்களாய் சூடு சொரணை அற்றவர்களாய் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்!
அவர்கள் தங்களின் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து நாட்டு மக்களைத் தட்டி எழுப்பவேண்டும்!
தங்களையொத்த உணர்வுள்ளவர்களை ஒரு அமைப்பின் கீழ் திரட்டுவதை முதல் அடியாகக் கொண்டு கிளர்ந்தெழ வேண்டும்!
நாட்டில் இன்றுள்ள அவலத்தைப் போக்கி நல்ல சமூக அமைப்பாக நாட்டை மாற்ற என்ன வழி என்பதை விரிவாக ஆராய வேண்டும்!
தவறு செய்ய வாய்ப்பில்லாத ஒரு அமைப்பை உருவாக்கி அது மக்களைச் சரியாக வழிநடத்தவேண்டும்!
அந்த அமைப்பின்கீழ் உருவாகும் மக்கள் இயக்கம் இன்றுள்ள அத்தனை மக்கள் விரோத நடைமுறைகளையும் துடைத்தெறிய வேண்டும்!
அதுதான் சரியான பாதை!
No comments:
Post a Comment