விவசாய அளவுகோல்!
நண்பர்களே!
இது என்ன?
விவசாய பூமியின் ஒரு பகுதி இது!
அதற்கு என்ன?
பலத்த மழை பெய்து ஐந்து நாட்களாயிற்று! இன்னும் உழவுகூட செய்ய வில்லை!
முன்னர் எப்போ மழை பெய்யும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்து சுமாரான மழை பெய்தாலும் சோளம், சாமை, தினை, உழுந்து, கொள்ளு, பாசிபயறு, தட்டைப்பயறு, துவரை மற்றும் பல வகையான புன்செய்ப் பயிர்கள் மானாவாரியாகச் சாகுபடி செய்த பூமி இது!
இப்போதும் விதைப்பு செயவார்கள்தானே?
அதுதான் கிடையாது!
அந்த பூமிக்குச் சொந்தமான விவசாயிக்குப் பயித்தியமா பிடித்திருக்கிறது?...
தரிசாகவே சும்மாவே கிடக்கும்!
போன மழைக்கு முழைத்த பண்ணைக் கீரைக் களைச் செடிகள்தான் காய்ந்த நிலையில் இன்னும் தெரிகிறது!
இனியும் வேறு கலைகள் வரும் காயும். நிலம் தரிசாகத்தான் இருக்கும்!
காரணம்?...
இப்போதெல்லாம் புஞ்சை விவசாயம் கட்டுபடியாகாது!
பண்ணும் செலவில் பாதிகூடத் தேறாது!
இது மட்டுமல்ல! நாட்டில் கோடிக கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மானாவாரியில் மகசூல் கொடுக்கும் வைப்பு இருந்தும் தரிசாகி விட்டன!
உழவு செய்ய மாடுகள் கிடையாது! ஏர் ஓட்ட ஆட்கள் கிடையாது! இயந்திரக் கலப்பையால் உழவு செய்தாலும் வரும் விளைச்சலுக்கும் செலவுக்கும் நட்டம்தான் ஆகும்!
அதனால் அழியாத சொத்து என்ற தகுதியுடன் விவசாயியைக் கடன்காரனாக்கிவிட்டு அல்லது பணம் படைத்தவனின் கறுப்புப் பணத்தை போட்டு வைக்கும் உண்டியலாக மாரி விலையாகிவிட்டு சும்மா கிடக்கின்றன!
அதுதான் பசுமைப் புரட்சியும் இயந்திரமயமாக்கலும் வேதி உரம் பூச்சிக்கொல்லிப் பயன்பாடும் விவசாயிக்குக் கொடுத்த வாழ்வு!
மானாவாரி விவசாயம் எப்போது குடியானவனை வாழவைக்குமோ அப்போதுதான் நமது நாட்டில் விவசாயி நிம்மதியாக வாழ முடியும்!
அதுதான் நாட்டின் விவசாயத்தின் நிலைமையை அளக்கும் அளவுகோல்!
எப்போது மழை பெய்தவுடன் விதைத்து மானாவாரியில் சிறு நிலப்பரப்புகூட விடுபடாமல் சாகுபடி நடக்கிறதோ காடுமேடெல்லாம் தானியங்களும் பயறுவகைகளும் பூத்துக் காய்த்து கண்களை நிறைக்கிறதோ அப்போதுதான் விவசாயமும் விளங்கும்! நாடும் விளங்கும்!
இப்போதைக்கு அது நடக்குமா?
No comments:
Post a Comment