இருப்பும் அறிவும்.....
பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து நம்மைச் சுற்றிலும் எதுவெல்லாம் நிலவுகிறதோ நமக்குள் எதுவெல்லாம் நிலவுகிறதோ அதுபற்றிய அறிவு வளர்ந்ததால்தான் மனித நாகரிகமும் அதைத் தொடர்ந்து வளர்ந்தது!
ஆனால் அந்த அறிவின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்காத நிலையில் மனித உணர்வுகள் அன்பால் நிறைந்து தளும்புவதற்குப் பதிலாக வெறுப்பும் கசப்புமாக முட்டி மோதி வாழ்ந்துகொண்டு உள்ளார்கள்!
அத்தகைய முரண்பட்ட வாழ்க்கைப் பாதை இப்போதைக்கு சரியான திசைக்குத் திரும்பும் அறிகுறி காணப்படவில்லை!
அதனால் மனித இனம் தானும் கெட்டுத் தான் வாழும் உலகையும் அதில் வாழும் சக உயிரினங்களையும் கெடுத்து அழிவுப் பாதையில் நடை போடுகிறது!
யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்ற கருத்து வெறும் வார்த்தைகளாக இல்லாமல் வாழும் தத்துவமாக மாறும்போதுதான் மனித நாகரிகம் மகத்தானது என்று சொல்லும் தகுதி பெறும்!
உண்மை தான் ஐயா...
ReplyDelete