பங்கு வர்த்தகத்தில் அனுபவத்தில் கற்றது!
------------------------------------------------------------------------
(எனது முகநூல் பதிவும் அதன் தொடர்ச்சியாக நம்பர்கலுக்கு நாள் அளித்த பதில்களும்.....)
பதிவு :
நண்பர்களே!
பங்கு வர்த்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சரியாக சந்தை நிலவரத்தைக் கணித்து வர்த்தகம் செய்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்கிறார்கள்!
அது உண்மையா?
என்னால் அதை நம்ப முடியவில்லை! ஏமாற்றுவேலை என்கிறேன்.....
தொடர்ந்து நான் நண்பர்களுக்கு அளித்த பதிலில் இருந்து :.............................................................................................................................................
இதற்கு எதிராக ஒவ்வொருவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது நண்பர்களே! ஆனால் எனது கருத்து என்வென்றால் இதன்மேல் நாட்டம் ஏற்ப்பட்டுவிட்டால் எத்தகைய ஒரு மனிதரிடமும் உழைத்துப் பிழைக்கும் எண்ணத்தை ஒழித்துவிடும் என்பதே!
மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவர்கூட, இது என்ன பிரமாதம் , சரியான நேரத்தில் வாங்கி அல்லது விற்று வைத்திருந்தால் ஒரு வருடம் சம்பாதிப்பதை ஒரு லாட்டில் சம்பாதித்து விடலாம் என்ற எண்ணம்தான் மேலோங்கும் என்று நினைக்கிறேன்....
பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளைப் பற்றி அதில் ஈடுபட்டுள்ளவர்களே சரியாகப் புரிந்திருக்கிரார்களா என்று தெரியவில்லை! அல்லது புரிந்தும் ஏமாற்றுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
நான் கேட்ட ஒரு கேள்விக்கு தொலைக் காட்சி நிகழ்ச்சியிலாகட்டும் நேரடியான சில நபர்களாகட்டும் சரியான பதிலைச் சொல்லவே இல்லை!
ஆனால் இது தலைவைத்துப் படுக்கக்கூடாத ஒரு தொழிலாகப் படுகிறது நண்பர்களே! காரணம் இதில் கிடைக்கும் லாபம் இதில் மற்றவர் அடையும் நட்டத்தில் ஒரு பகுதியே! யாருக்கும் லாபம் இல்லாமல் முதலீட்டாளர்களிடம் இருந்து தினமும் கரையும் துகை என்றென்றும் யாருக்கும் திரும்பி வராத பெரும் துகை ஆகும்!....
அதனால் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் லாபத்தைவிடப் பல மடங்கு மொத்த முதலீட்டில் இருந்து கண்ணுக்குத் தெரியாமல் களவாடப்படுகிறது என்பதை லாப போதையில் உள்ள யாரும் கண்டுகொள்வதில்லை என்பதில்தான் இந்தத் தொழிலின் வெற்றி அடங்கியுள்ளது!.
மற்ற தொழில்களில் மொத்த நஷ்டம் என்பது மொத்த லாபத்தை விழுங்கி விடுவது இல்லை !
ஆனால் இந்தத் தொழிலில் மொத்த நஷ்டம் என்பது மொத்த லாபத்தைவிடப் பல மடங்கு அதிகம் என்பதை நாம் நினைத்துப் பார்ப்பது இல்லை!...
அந்தக் கூடுதல் நஷ்டம் என்பது பங்கு வர்த்தகத்தைத் தொழிலாக நடத்தும் நிறுவனங்களுக்கும் தரகு நிறுவனங்களுக்கும் மற்றும் அதுசார்ந்த நிபுணர்களுக்கும் அரசுக்கும் வங்கிகளுக்கும் லாபமாகவும் கமிஷனாகவும் ஊதியமாகவும், வரியாகவும், வட்டியில்லாத வைப்பு நிதியாகவும் போய்ச் சேருவதைப் பார்க்கலாம்.
இதிலும் லாபம் பார்ப்பவர் ஒரு சிலர் இருக்கலாம்! ஆனால் அதைவிடப் பல மடங்கு மக்கள் சராசரியாக இழப்பைச் சந்திக்கிறார்கள் என்பதுதான் நாம் கவலைப்படவேண்டிய உண்மையாகும்.
அந்தச் சிலரும் அடுத்து வரும்காலத்தில் இழப்பைச் சந்தித்த அந்தப் பலருள் ஒருவராக ஆகலாம் என்பதும் உண்மை!
பங்கு வர்த்தகத்தில் எந்த முறையில் லாபம் வந்தாலும் அது மொத்த இழப்பில் ஒரு பகுதியே!
இழப்பில் பெரும்பகுதி முதலீட்டாளர்களைத் தவிர மற்றவர்களைச் சென்றடைகிறது!
அதனால் மக்களின் பணம் இந்தத் துறையில் இறைக்கப்படும் அளவு திரும்பவும் அவர்கள் கைகளுக்குப் போய்ச் சேர்வது இல்லை என்பதுதான் முக்கியம்.
அதனால் பங்கு வர்த்தகத்தின் பேரால் மக்களின் பணம் அட்டையாக உறிஞ்சப்படுகிறது.
லாபம் கிடைத்த சிலர் மேலும் கொள்ளை லாபம் கிடைக்கும் என்ற ஆசையிலும் நஷ்டம் அடைந்த ஏராளமானோர் எப்படியும் மீண்டுவிடலாம், லாபம் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையிலும் எப்போதும் இருக்கிறார்கள்.
அதனால் உண்மையான விபரீதத்தை யாரும் கண்டு கொள்வதில்லை என்பதுதான் உண்மை நிலை!...
அதனால் இந்தக் கரடிகளும் காளைகளும் தாங்கள் பாடுபட்டு உழைத்துத் தேடிய கரும்பாகிய பணத்தை பங்கு வர்த்தகம் என்னும் செக்கில் இட்டு செக்கை இழுக்க இழுக்க அதிலிருந்து சாறாக வெளிப்படும் ஆதாயங்களை மற்றவர்கள் அனுபவிக்கிறார்கள்.
கரடிகளும் காளைகளும் என்றும் பயன் அடையப்போவதில்லை.
கரடிகள் காளைகள் ஆகும். காளைகள் கரடிகளும் ஆகும்.
தங்கள் வேஷத்தை மாற்றிக் கொள்வதையும் பொருளை இழப்பதையும் தவிர வேறு பயன் அவற்றுக்கு இல்லை!
பங்குவர்த்தகத்தின் வலிமை!. நல்லவர்களையும் நேர்மையாளர்களையும் திறமையாளர்களையும்கூட அவர்களின் தனித்தன்மையைச் செயலிழக்கச் செய்து விடும்.
சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்திக்கத் தவறுவார்கள். கணக்கறிந்தவர்கள் கணக்கைத் தவறாகப் போடுவார்கள்.அறிவாளிகள்கூட அதிருஷ்டத்தை நம்பத் துவங்கி விடுவார்கள்....
அதுமட்டும் அல்ல , சிக்கலான நேரத்தில் பற்று, பாசம் எல்லாம் பின்னுக்கும் போய் லாப நட்டம் சம்பந்தப்பட்ட உணர்வுகள் மட்டும் முன்னால் நிற்கும்.
இது சார்ந்த முதலீடுகளுக்கு அதிக வட்டி கொடுப்பதாகச் சொல்லி எண்ணற்ற மக்கள் நிதி நிறுவனங்களால் எமாற்றப்பட்டிருக்கிறார்கள்....
பங்கு வர்த்தகத்தில் ஏற்படும் இழப்பும் விவசாயத்தில் ஏற்ப்படும் இழப்பும் ஒன்றாக நினைக்க முடியாது!
ஒரு முறை இழப்பு ஏற்பட்டால் பல முறை வருவாய் கிடைக்கும் தொழில் விவசாயம்.
அந்த வருவாய் கட்டுபடி ஆகவில்லை என்பதுதான் இன்றுள்ள விவசாயிகள் பிரச்சினை!
ஆனால் பங்கு வர்த்தகம் சிலரைப் பணக்காரர் ஆக்கும் அதே நேரம் ஏராளமானோரைப் படுகுழியில் தள்ளுகிறது என்பது உண்மை!
இப்படி இருக்க இரண்டையும் ஒன்று என்று யாரும் சொல்ல முடியாது!
சிலர் தாங்கள் இழக்கவில்லை என்கிறார்கள்!
இழக்கவில்லை என்று சொல்லும் அதே நேரம் இழக்கின்ற அனேகம் பேருக்கு என்ன பதில் சொல்ல முடியும்?
இது பற்றி விரிவாக விவாதிக்க விரும்புகிறேன் நண்பர்களே!
பொறுமையுடன் பதில் சொல்ல முடிந்தால் நிறைய ஐயங்கள் உள்ளது பதில் சொல்லித் தெளிவு படுத்தலாம்.
படிக்கும் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும்!
எனக்கும் இதில் சிறிய அனுபவம் உண்டு!
ஆதாவது மக்காச் சோளம் போன்ற தானியங்களையும் தங்கம் வெள்ளி போன்றவற்றையும் பணம் இருக்கும்போது வாங்கி வைத்தால் விலை ஏறும்போது விற்கலாம். கொள்முதல் பண்ணாமல் குறைந்த பணத்தை மார்ஜின் துகையாகச் செலுத்தி வாங்கலாம் விற்கலாம், பொருளைக் கையாள வேண்டியது இல்லை. அதை அதற்கென உள்ள நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும் என்று சொன்னார்கள்.
சொன்ன நபர்கள் எனக்கு நெருங்கியவர்களாக இருந்ததாலும் எனக்கு வருவாய் இல்லாத கடினமான காலமாக இருந்ததாலும் முழுக்க ஆராயாமல் இறங்கிவிட்டேன்.
அதன்பின்தான் அதுபற்றிய பாதகமான நிலைமைகளை உணர்ந்தேன்.
அதில் உள்ளோரின் நடவடிக்கைகளையும் கவனித்தேன்.
அனுபவம் கசப்பாக இருந்தது!
எதிர்மறையாக உணர்ந்தேன்.
நான் எனது அனுபவங்களை வைத்து மட்டும் மதிப்பிடவில்லை ! அதன் அடிப்படைகளையே ஆராய்ந்து பார்த்தேன்.
சூதாட்டத்தில் அடையும் வெற்றிக்கும் இதில் கிடைக்கும் வெற்றிக்கும் வேறுபாடு இல்லை என்பதைக் காலம் கடந்து உணர்ந்தேன்....
ஒ!....சிலர் தாங்கள் இதில் கொஞ்சம் ஆதாயம் அடைந்ததை எவ்வளவு பெருமையாகவும் திறமையாகவும் நினைக்கிறார்கள்!
ஆனால் அவர்களைப் போன்றவர்கள் மிகக் குறைவே!
அத்தகையவர்களுள் தாங்களும் ஒருவராக ஆகவேண்டும் என்ற உந்துதல்தான் இந்த வர்த்தகத்துக்கு உள்ளே மக்களைக் கவர்ந்து இழுக்கிறது!
சூதாட்டக் கிளப்பில் சிலர் தோற்பதும் சிலர் ஜெயிப்பதும் தொடர்ந்து நடக்கும்.
தோற்றவர்களும் ஜெயித்தவர்களும் எவ்வளவு உள்ளே கொண்டு வந்தார்களோ அவ்வளவையும் வெளியே கொண்டுபோவதில்லை.
மொத்தத்தில் குறைகிறது.
கணிசமாகக் குறைகிறது.
அந்தக் குறைவு என்பது கிளப் சொந்தக் காரனுக்கு வருவாயாகப் போகிறது.
தோற்பதும் ஜெயிப்பதும் உறுதி இல்லை.
கிளப் சொந்தக்காரன் பணக்காரன் ஆவது உறுதி!
இதுதானே பங்கு வர்த்தகத்திலும் நடக்கிறது?
அதில் வெற்றியடையும் கனவுடன்தானே பலரும் தோல்வி அடைகிறார்கள்?....
அந்த வெற்றி அடைபவர்களாக பயிற்சியின்மூலம் ஆகமுடியும் என்பதுதான் நிபுணர்களின் மற்றும் ஜெயித்தவர்களின் கருத்து!
ஆனால் சிலர் ஜெயிக்கவேண்டும் என்றால் பலர் இழக்கவேண்டும் என்ற நிபந்தனையை யாரும் எதுவும் செய்ய முடியாதல்லவா?..
பங்கு வர்த்தகத்தில் எத்தனை கெட்டிக்காரர்கள் உருவானாலும் அதைவிட பல மடங்கு முதலை இழப்பவர்கள் அங்கு இருந்துதானே தீரவேண்டும்?....
அது லாபத்துக்கு அடிப்படை நிபந்தனை அல்லவா?
அதுதானே பிரச்சினையே!
சில வெற்றி பெரும் நபர்களை ரோல்மாடல்களாகக்கொண்டு எண்ணற்றவர்கள் இழக்கிறார்கள் என்பதே சோகம்!
சீட்டு விளையாடியே சம்பாதித்தவர்கள் பலரைப் பார்க்கலாம்.
ஆனால் அவர்களைப்போல் கெட்டிக்காரர்களாக சீட்டு விளையாடி சம்பாதிப்பதைவிட நல்ல வழிகள் எத்தனையோ இருக்கின்றன.
அதனால் வெற்றி பெற்றவர்கள்கூட அதைத் தங்கள் பிள்ளைகள் தொடர விரும்புவது இல்லை!
பங்கு வர்த்தகமும் அப்படியே!
சம்பாதித்தவர்கள்கூட தங்கள் பிள்ளைகள் அதில் ஈடுபடுவதைப் பெரும்பாலோர் விரும்ப மாட்டார்கள்.
வேண்டுமென்றால் தரகர்களாகவோ ஆலோசகர்களாகவோ இருக்க வழிகாட்டுவார்கள்.....
பொதுவாகவே பங்கு வர்த்தகம் ஒரு மனிதனின் அனைத்துப் பண்புகளையும் ஆட்டிப்பார்க்கும் வல்லமை படைத்தது!.
நான் கமாடிட்டி வர்த்தகத்தில் இறங்கியபோது நான் செய்தது தவறு என்று உணரும்வரை எனக்குத் தெரியாது !
காரணம் எனக்கு அதில் பயிற்சி கிடையாது என்பது மட்டும் அல்ல!
மிகவும் எளிமையானதாக எனது அன்புக்கு உரியவர்களால் அறிவுருத்தப்பட்டிருந்தேன்.
தவறுக்குப் பின்னால் உணர்ந்தேன்.
எனது இழப்பை வைத்து நான் முடிவுக்கு வரவில்லை!
எனது இழப்பு ஏன் ஏற்பட்டது? எந்த இடத்தில் தவறு செய்தோம்? தவறு செய்யாமல் இருந்திருக்க என்ன வாய்ப்பு இருந்தது? தவறு செய்யாவிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்குமா ? என்று பலவிதமாக ஆராய்ந்தேன் .
நிபுணர்கள் எழுதிய சில புத்தகங்களையும் படித்தேன்.
ஆனால் இதன் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தாலும் இந்த வர்த்தகத்தில் வருவாய் உத்திரவாதம் இல்லை, தோல்வி அடைந்து முதலை இழக்கும் பெரும்பாலோரில் ஒருவராக இல்லாமல் வெற்றி பெரும் ஒரு சிலருள் ஒருவராக ஆக முயற்சி செய்யலாம்.
ஆனால் தோற்கும் பலருள் ஒருவராக ஆவதற்குத்தான் வாய்ப்புக்கள் அதிகம் என்பதை உணர்ந்தேன்....
அப்படி நான் நினைத்தது தவறு என்றால் எனது நியாயமான கேள்விகளுக்குத் தெளிவான விடை கிடைக்கவேண்டும்!
நண்பர்கள் சொல்கின்ற பயிற்ச்சியின் மூலமும் அதற்கேர்ப்பச் சில பண்புகள் மூலமும் தோல்விகளைத் தவிர்த்து வெற்றி ஈட்டலாம் என்ற கருத்துக்களை நான் மறுக்கவில்லை!
ஆனால் அது நிபந்தனையற்றது அல்ல!
அந்த நிபந்தனைதான் இதைச் சூதாட்டம் ஆக்குகிறது.
அந்த நிபந்தனை சிலர் வெற்றி அடையப் பலர் பலியாடுகள் ஆகித்தான் தீரவேண்டும் என்பதே!
வெற்றி பெறுபவர்கள் தாங்கள் அடைந்த ஒரு ரூபாய் ஆதாயத்தைத் திறமையின் அளவுகோலாகப் பார்க்கிறார்கள்.
ஆனால் லாபம் அடைந்தவர்களும் நட்டம் அடைந்தவர்க்களுமாக இழக்கும் பத்து ரூபாய்களைப் பற்றித்தான் நாம் கவலைப்படுகிறோம் .
அந்த ஒன்பதுரூபாய் இழப்பு வெற்றியாளர்களின் கண்களில் படுவதில்லை என்பதுகூட இயல்பானது. தோல்வி அடைபவர்களும் கண்டுகொள்வது இல்லை! அது சேரவேண்டிய இடத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேருகிறது! அந்த நிலைதான் இதைச் சூதாட்டம் ஆக்குகிறது!
பொதுவாகவே பங்கு வர்த்தகம் ஒரு மனிதனின் அனைத்துப் பண்புகளையும் ஆட்டிப்பார்க்கும் வல்லமை படைத்தது!.
நான் கமாடிட்டி வர்த்தகத்தில் இறங்கியபோது நான் செய்தது தவறு என்று உணரும்வரை எனக்குத் தெரியாது !
காரணம் எனக்கு அதில் பயிற்சி கிடையாது என்பது மட்டும் அல்ல!
மிகவும் எளிமையானதாக எனது அன்புக்கு உரியவர்களால் அறிவுருத்தப்பட்டிருந்தேன்.
தவறுக்குப் பின்னால் உணர்ந்தேன்.
எனது இழப்பை வைத்து நான் முடிவுக்கு வரவில்லை!
எனது இழப்பு ஏன் ஏற்பட்டது? எந்த இடத்தில் தவறு செய்தோம்? தவறு செய்யாமல் இருந்திருக்க என்ன வாய்ப்பு இருந்தது? தவறு செய்யாவிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்குமா ? என்று பலவிதமாக ஆராய்ந்தேன் .
நிபுணர்கள் எழுதிய சில புத்தகங்களையும் படித்தேன்.
ஆனால் இதன் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தாலும் இந்த வர்த்தகத்தில் வருவாய் உத்திரவாதம் இல்லை, தோல்வி அடைந்து முதலை இழக்கும் பெரும்பாலோரில் ஒருவராக இல்லாமல் வெற்றி பெரும் ஒரு சிலருள் ஒருவராக ஆக முயற்சி செய்யலாம்.
ஆனால் தோற்கும் பலருள் ஒருவராக ஆவதற்குத்தான் வாய்ப்புக்கள் அதிகம் என்பதை உணர்ந்தேன்....
அப்படி நான் நினைத்தது தவறு என்றால் எனது நியாயமான கேள்விகளுக்குத் தெளிவான விடை கிடைக்கவேண்டும்!
நண்பர்கள் சொல்கின்ற பயிற்ச்சியின் மூலமும் அதற்கேர்ப்பச் சில பண்புகள் மூலமும் தோல்விகளைத் தவிர்த்து வெற்றி ஈட்டலாம் என்ற கருத்துக்களை நான் மறுக்கவில்லை!
ஆனால் அது நிபந்தனையற்றது அல்ல!
அந்த நிபந்தனைதான் இதைச் சூதாட்டம் ஆக்குகிறது.
அந்த நிபந்தனை சிலர் வெற்றி அடையப் பலர் பலியாடுகள் ஆகித்தான் தீரவேண்டும் என்பதே!
வெற்றி பெறுபவர்கள் தாங்கள் அடைந்த ஒரு ரூபாய் ஆதாயத்தைத் திறமையின் அளவுகோலாகப் பார்க்கிறார்கள்.
ஆனால் லாபம் அடைந்தவர்களும் நட்டம் அடைந்தவர்க்களுமாக இழக்கும் பத்து ரூபாய்களைப் பற்றித்தான் நாம் கவலைப்படுகிறோம் .
அந்த ஒன்பதுரூபாய் இழப்பு வெற்றியாளர்களின் கண்களில் படுவதில்லை என்பதுகூட இயல்பானது. தோல்வி அடைபவர்களும் கண்டுகொள்வது இல்லை! அது சேரவேண்டிய இடத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேருகிறது! அந்த நிலைதான் இதைச் சூதாட்டம் ஆக்குகிறது!
உண்மை உண்மை உண்மை..
ReplyDeleteவேண்டாம்... வேறு எந்த வேலையையும் செய்யலாம்...
விளக்கத்திற்கு நன்றிகள் பல ஐயா...
வாழ்த்துக்கள்...
பங்கு வர்த்தகம் ஒரு பெரிய சூதாட்டம் ;மிகப்பெரிய மோசடி;மிகப்பெரிய திருட்டு.நன்றிஐயா.
ReplyDelete