பிச்சை...
பெரிய ஞானிகள்கூடப் பிச்சை ஏற்று வாழ்ந்தது அக்கால தர்மம்!
மகான் புத்தர் தனது வீட்டுக்கே பிச்சைப் பாத்திரம் ஏந்திச் சென்றிருக்கிறார்!
அப்படிப் பிச்சை ஏற்பதும் அவர்களுக்குப் பிச்சை இடுவதும் உயர்ந்த
தர்மமாகக் கருதப் பட்டது!
காரணம் அக்காலத் துறவிகள் வாழ்வதற்காகப் பிச்சை எடுக்கவில்லை!
உயர்ந்த தர்மங்களை மக்களுக்குச் சொல்லி நெறிப்படுத்தும் சேவையைச்
செய்து வந்தார்கள். அந்தச் சேவையைத் தொடரத் தாங்கள் வாழவேண்டும் என்பதற்காக எந்த மக்களுக்கு
அமுதத்தைவிட உயர்ந்த தர்மத்தை வழங்கினார்களோ அந்த மக்கள் பயபக்தியுடன் வழங்கிய உணவைப்
பெற்றுத் தாங்களும் உண்டு இயலாத பிறர்க்கும் அளித்தார்கள்.
அவர்கள் ஏற்றுக்கொண்ட உணவாகிய அமுதை விட அவர்கள் வழங்கிய ஞானாமுது
மதிப்புமிக்கதாக இருந்தது!
அப்படி இடுவதும் ஏற்பதும்தான் உண்மையான பிச்சை ஆகும்!
துறவிகள் பெரும் செல்வந்தர்களாகவும் மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருப்பவர்களாகவும் ஆகி விட்டார்கள்...
அப்படியல்லாதவர்கள் வெறும் பிச்சைக்காரர்களாகவே மதிக்கப் படுவார்கள்.
மக்களும் பிச்சை இடுவதை மதிப்புக்குறிய கடமையாக நினைப்பது இல்லை!
அது உடம்பை வளர்க்கவும் இயலாதவர்களும் சோம்பேரிகளும் எப்படியாவது வாழ்வதற்காகப் பிறரிடம் கைநீட்டி வாங்கிப் பிழைக்கவும் ஆன உபாயம் என்று ஆகிவிட்டது.
அது தவிர பல்வேறு வகைகளில் மக்களே பிச்சைக்காரர்களும் ஆக்கப்பட்டு விட்டார்கள்....