என்ன செய்யவேண்டும்?....
மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணத்தில் விவசாய விளைவிளைபொருட்களுக்ககச் செலவிடப்படும் சதவிகிதம் உயர்ந்து மற்ற தேவையற்றவை குறைய வேண்டும்.
அதைவிட்டு விவசாயிகளுக்கு வேறு கதிமோட்சம் இல்லை!
முன்னர் நிலைமை அப்படித்தான் இருந்தது.
ஆனால் அத்தகைய கண்ணோட்டம் உள்ள அரசுகளாக நம் நாட்டில் இல்லை என்பதே உண்மை!....
முதலில் நாம் ஒன்றை உணரவேண்டும்.
ஆதாவது இன்றைய நிலையில் விவசாயி எந்த உற்பத்தியைப் பெருக்குகிறானோ நிச்சயம் சந்தையில் அது அவனது தலையில் கல்லைப் போடும்.
அனைத்து விளைபொருட்களின் அதிக உற்பத்தியும் அவனுக்கு அந்த அனுபவத்தைத்தான் கற்பித்திருக்கிறது.
ஆனால் செலவுகள் மட்டும் அதிகரிக்கும்.....
இந்த விஷ வலையில் இருந்து விவசாயி மீளவேண்டும்.....
விவசாய விளைபொருட்கள் அனைத்தையும் நியாயமான விளை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்யவேண்டும்.
அரசே மக்களுக்கு விநியோகமும் செய்யவேண்டும்.
தேவைக்கு அதிகமாக விளைந்தாலும் அதை அரசு நிர்ணய விலைக்குக் கொள்முதல் செய்து அவற்றை மதிப்புக் கூட்டி இருப்பு வைத்துப் பற்றாக் குறையான காலங்களில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
அதற்கான தொழில் மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் துவங்க வேண்டும்.
அதற்கும் மேல் அதிகமாக இருப்பதை ஏற்றுமதி செய்ய வேண்டும்.
அதனால் கிடைக்கும் வருவாய் அல்லது இழப்பை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்...
இதை மிக நேர்மையாகச் செய்யும் அரசுகள் இருந்தால் அல்லாமல் விவசாயிகள் உருப்பட வழி இல்லை.
ஆனால் விவசாயிகள் தங்களின் போராட்ட நடவடிக்கையின்மூலம் அரசுகளை நிர்ப்பந்திக்க முடியும்.
ஆனால் அதற்கு அனைத்து விவசாயிகளையும் ஒன்று படுத்தும் நேர்மையான தலைமையில் ஒரு இயக்கம் உருவாக வேண்டும்....
No comments:
Post a Comment