பாரம்பரிய மருத்துவங்கள்...
பாரம்பரிய மருத்துவங்களின் மகத்துவத்தை உணர்ந்து அவற்றுக்குப் புத்துயிர் ஊட்ட நினைப்பது நியாயமே!
அவசியமும் கூட!
ஆனால் அதற்கு முன்னதாக அவை ஏன் வலுக்குன்றி மறையத் துவங்கின?
ஆங்கில மருத்துவம் எதனால் முதன்மையான இடத்துக்கு வந்தது?
என்பதை ஆராய வேண்டும்.
பாரம்பரிய மருத்துவ முறைகள் தேவைக்குப் போதுமானதாக இல்லாததும் நம்பகத்தன்மை குறைந்துகொண்டே வந்ததும்தான் ஆங்கில மருத்துவம் இந்த அளவுக்கு வளர்ந்ததர்க்குக் காரணங்கள் ஆகும்.
அதனால் பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்து வழிகளிலும் தங்களை வளர்த்துக் கொள்வதும் நம்பகத் தன்மையைப் பெறுவதுமே சரியான மதிப்பைப் பெறுவதற்கு வழிகள் ஆகும்!
அதை விட்டு விட்டு ஆங்கிலமருத்துவத்தை வசைபாடுவது என்பது ஒரு மருத்துவம் ஆகாது!....
ஆனால் தங்களை வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக ஆங்கில மருத்துவத்தின் குறைகளை பூதாகரமாகக் காட்டி மக்களைப் பயமுறுத்துவதைத் தங்கள் முக்கியக் கடமையாகச் செய்கிறார்கள்.
காரணம் அவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளவும் மக்களின் நம்பிக்கையைப் பெறவும் மிகவும் முயற்சி செய்ய வேண்டும்!
அனால ஆங்கில மருத்துவத்தின் மேல் ஏற்றப்படும் அதிருப்தியாலும் இயலாமையாலும் ஒதுங்க நினைக்கும் மக்களை அப்படியே தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வது எளிதாக நினைக்கிறார்கள்!
அது நியாயமான செயல் அல்ல! ஏமாற்று வேலை!
ஏமாற்று வேலைகளால் என்றும் எந்தத் துறையும் வளர்ந்து விட முடியாது!
இதை ஏன் உணர மறுக்கிறார்கள்?
உணர்வது உண்மையானால் பாரம்பரிய மருத்துவத் துறைகளை மீண்டும் புத்துயிர் ஊட்டி வளர்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கலாம்.
அதற்கு உதவிசெய்ய அரசுகளை வற்புறுத்தலாம்!
பாரம்பரிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவ அரசுகள் முடிவு செய்யலாம். அனைத்து ஆய்வுகளுக்கும் மருந்துகளுக்கும் அரசுகள் தகுந்த திட்டங்கள் வகுத்துச் செயல் படுத்தலாம்.
அதை விட்டு, மக்களை ஏமாற்றுவதில் குறியாக இருப்பது நல்ல பண்புள்ள செயல்முறை ஆகாது!...
அப்படிச் செய்கின்ற போலி ஆசாமிகளை இனங்கண்டு தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்!...
அதுதான் சரியான வழி!
No comments:
Post a Comment