ஆன்மிகம் - அடிப்படைத் தத்துவங்கள்......
மாபெரும் அண்டம் நாம் அறிந்த, அறியாத அத்தனையையும் உள்ளடக்கியது!
அது உருவம் என்றால் அதன் உள்ளடக்கமே பரம்பொருள் அல்லது இறை!
அதில் ஒரு அங்கமாக நம்மை உணர வேண்டும்!
நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறதென்று உணரவேண்டும்!
நமக்கு உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறதென்று உணரவேண்டும்!
சின்னஞ்சிறியதில் இருந்து பிரம்மாண்டமானது வரை நடக்கும் இயக்கங்களை உணர்ந்து, அதில் நமது மனித இனத்தின் பாத்திரம் என்பது என்ன என்பதை உணர வேண்டும்!
அத்தகைய உணர்வுகள் யதார்த்த உண்மைகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.
இத்தகைய அறிவுடன் சக மக்களுடனும் சக உயிரினங்களுடனும், இயற்கையுடனும் இயைந்து வாழும் வாழ்வு பற்றிய கலை அல்லது கோட்பாடுதான் ஆன்மிகம்!....
அத்தகைய ஆன்மிகத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஒவ்வொன்றும் ஆன்மிகத் தத்துவங்களே!....
No comments:
Post a Comment