திருமணம் - ஒரு அலசல்!
ஒரு காலத்தில் மாப்பிள்ளை தேடும் பெண்வீட்டார் தங்கள் பெண் கரம் பிடிக்கும் ஆண் ஒழுக்கமானவனாகவும் பெண்ணை மனம் கோணாமல் காப்பாற்றுபவனாகவும் பெண் நிம்மதியாக வாழும் வசதி இருந்தால் நல்லது என்றும் நினைத்தார்கள்.
அதேபோல பெண் பார்க்கும் மாப்பிளை வீட்டாரும் தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாகவும் அவசரகாலத்துக்கு உதவக்கூடிய வாய்ப்பு உள்ள இடமாகவும் இருந்தால் போதும் என்று நினைத்தார்கள்.
இத்தகைய எதிர்பார்ப்புகளை மட்டும் கொண்டு அமைந்த வாழ்க்கை பெரும்பாலோருக்கு நல்லதாகவே அமைந்தது!
ஆனால் இக்காலத்தில் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கல்வித் திறனும் ஆண்களுக்கும் மேலாக உயர்ந்ததால் பெண்வீட்டாரின் எதிர்பார்ப்புகள் வாலறுந்த பட்டம்போலத் தாறுமாறாக உயர்ந்து (?) விட்டன.
ஆண்வீட்டாரும் முந்தைய நினைப்பைஎல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு பெண் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
இதற்கு நடுவில் நாகரிகம் என்ற பெயரால் வளர்ந்த அநாகரிகத்தாலும் திருமண காலம் வரம்பின்றித் தள்ளிப் போனதாலும் ஒழுக்க நெறிகள் சார்ந்த வாழ்க்கை முறை பலவீனமடைந்து கட்டுப்பாடற்ற போக்குகள் திருமணத்துக்கு முன்பே வளர்ந்து விட்டன.
இந்த நிலையில் திருமண உறவுகள் தவறான அடிப்படைகளின்மேல் நிறுவப்படுகின்றன!
சமூகத்தில் நிலவும் தவறான பண்பாட்டுச் சீரழிவுகளின் தாக்கம் கணவன் மனைவி இடையே முற்றிலும் மறைந்துபோகாமல் நீறு பூத்த நெருப்பாக இருக்கவே செய்கின்றது.
அது பரஸ்பரம் அன்பை வளர்ப்பதற்குப் பதிலாக அவநம்பிக்கையையும் மனக் காயங்களை ஏற்படுத்தும் உணர்வையும் வளர்க்கிறது!
அந்த உணர்வு பலருடைய வாழ்வையே சின்னாபின்னமாகச் சிதறடித்தும் விடுகிறது!
அதன்காரணமாக முன்னர் வருவாய் குறைந்த நிலையில் அனுபவித்த மகிழ்ச்சியான வாழ்வைக்கூட வசதியான நிலையைக் கொண்டு அனுபவிக்க முடிவது இல்லை!
கோளாறு எங்கே இருக்கிறது?
இதற்குத் தீர்வு என்ன ?
No comments:
Post a Comment