ஏன் நடக்காது?...
நண்பர்களே!
நான் சில நேரங்களில் இப்படி நினைப்பதும் உண்டு!
ஆதாவது மனிதனின் தொடர்ந்த இயற்கைக்கு எதிரான அட்டூழியங்களால் பலவகையான எதிர்விளைவுகளைச் சந்திக்கவும் நேர்கிறது.
அதில் முதலாவது இயற்கைச் சீற்றங்கள், சுற்றுச் சூழல் மாற்றம்......அதனால் பூமி மனிதவாழ்வுக்குப் பயனற்ற திசையில் மாற்றம் அடைவது!
இரண்டாவதாக பல்லுயிர்ச் சமநிலை பாதிப்பதால் உருவாகும் புதுப்புதுக் கிருமிகளும் புதுப்புதுக் கொள்ளை நோய்களும்.
எனது அச்சம் என்னவென்றால் ஏதாவது ஒரு கண்ணுக்குத் தெரியாத விஷப்பூச்சி தோன்றி அது கடித்தால் மனிதனுக்கு உடனே மரணம் என்ற ஒரு நிலை உருவானால் அப்போதைய உலகம் எப்படி இருக்கும் என்பதுதான்!
அப்படித் தோன்றாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
No comments:
Post a Comment