முதல் அடி!
ஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டு அம்சங்கள் தவிர்க்க முடியாதவை.
ஒன்று தனிநபர் வாழ்க்கை. இரண்டாவது சமூக வாழ்க்கை.
இந்த இரண்டு பாத்திரங்களும் ஒன்றையொன்று சார்ந்தவை.
இந்த இரண்டு பாத்திரங்களும் சிறப்பாக இருக்குமளவு ஒரு நாடும் உலகமும் மேலானதாகவும் இருக்கும். ஆனால்
துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் இந்த இரண்டு பாத்திரங்களும் சிறப்பாக இல்லை.
அதன் விளைவுகளைப் பார்க்கிறோம்.
இதில் மாற்றம் எதில் துவங்குவது என்று பார்த்தால் இரண்டுமே முக்கியம்தான்.
ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும்.
அடிமரமும் கிளைகளும் ஒன்றையொன்று சார்ந்ததாக இருப்பினும் கிளைகளில் ஏற்படும் பாதிப்புகள் அடிமரத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைவிட அடிமரத்தில் ஏற்படும் பாதிப்புகள் கிளைகளில் ஏற்படுத்தும் விளைவுகள் கடுமையானவையும் கூடுதலானவையும் வேகமானவையும் ஆகும்.
காரணம் ஒவ்வொரு கிளையும் அடிமரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
சமூக வாழ்க்கை அடிமரத்தைப் போன்றது.
தனிநபர் வாழ்க்கை கிளைகளைப் போன்றது.
அதனால் சமுதாயத்தில் பெருத்த மாற்றங்களை ஏற்ப்படுத்த வேண்டுமானால் முன்னோடிகள் முதலடி கொடுக்க வேண்டியது சமூக வாழ்வுக்கே!
அதில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தும்!....
No comments:
Post a Comment