மூலம் !
காரணமில்லாத எதுவும் எங்கும் கிடையாது .
ஆதாவது மூலமில்லாத மூலம் என்று எதுவும் இருக்க முடியாது!
அப்படியிருக்க இதைத்தான் மூலம் என்று எதைச் சொன்னாலும் அது பொய்யே!
நம்மால் முடிந்ததெல்லாம் நமது அறிவுக்கு எட்டியவரையிலான இயக்கப் போக்கில் ஒரு அங்கமாகச் சிறப்பாக வாழ்வது எப்படி என்பதை அறிந்து அதன்படி நடப்பதே!
இயக்கத்தின் மூலத்தைக் கண்டறிய முயல்வதும் அது இப்படித்தான் என்று சொல்லத் துணிவதும் பயனற்ற வேலையும் அபத்தமான கற்பனையுமே ஆகும்!
நமது அறிவு எட்டக்கூடிய எல்லைதால் அண்டத்தின் எல்லை!
அதைப் பற்றிய ஆழமான பார்வைதான் அறிவியலும் ஆன்மிகமும்!
சந்தேகமே வேண்டாம்!
அறிவியலுக்கு வழிகாட்டுவதும் அறிவியலால் வளர்வதும்தான் ஆன்மிகம்!
அறிவியலுக்கு முரண்படும் எதுவும் ஆன்மிகம் அல்ல! மூடநம்பிக்கைகளே!...
No comments:
Post a Comment