நிலை மாறுமோ!....
சென்னை தோன்றாதபோது அங்கு நில அமைப்பு எப்படி இருந்திருக்கும்?
மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் ஆங்காங்கே இயற்கையாகவே அமைந்த தாழ்வான பள்ளதாக்குகளின் வழியாகவும் ஓடைகள் வழியாகவும் சிற்றாறுகளின் வழியாகவும் கடலுக்குச் சென்றிருக்கும்.
ஆதாவது இப்போது நீர் ஓடிக்கொண்டிருக்கும் அல்லது தேங்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலான இடங்களில் நீரைப் பார்க்க முடியாது.
மழையை மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் நீர் பெருக்கெடுக்காத மேட்டுப் பகுதிகளில் வீடுகள் ஆகும்போது மழை நீரை உறுஞ்ச வழி இல்லாததால் அந்த நீரும் சேர்ந்து மழை வெள்ளநீரின் அளவு இரட்டிப்பாகவே செய்யும்.
அதன்காரணமாகப் பெருகும் நீர் பாதிக்காமல் செல்லவேண்டுமானால் முன்னர் இருந்த நீர்வழிப் பாதைகளும் சிற்றாறுகளும் ஓடைகளும் முன்பிருந்ததைவிட ஆழமாகவும் அகலமாகவும் இரட்டிப்பு கொள்திறனுடன் ஆக்கப்படிருக்க வேண்டும்.
அப்படிச் செய்யவில்லை என்பது மட்டுமல்ல ஏற்கனவே இருந்த நீரோட்டப் பாதைகள் அனைத்தையும் நெருக்கிக் குறுக்கினோம். முடிந்தவரை தடுத்து மேடாக்கினோம்.
சுயநலத்துக்காக மக்கள் நலம் பலியிடப்பட்டது.
அதன் விளைவாக பெருமழைக் காலங்களில் மக்கள் வாழும் இடங்கள் ஏரிகளாகவும் தெருக்களெல்லாம் ஓடைகளாகவும் பெரிய சாலைகளெல்லாம் சிற்றாறுகளாகவும் அடையாறு, கூவம் போன்றவையெல்லாம் நதிகளாகவும் மாறிப்போயின!
இயற்கையின் கதிப்போக்கில் மக்கள் விடப்பட்டார்கள்.
இதற்கு முடிவு ஏற்படுமா?
சரியான அச்சமற்ற சென்னையாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளனவா?
அதற்காக எதையெல்லாம் செய்வது அவசியமோ அதையெல்லாம் செய்யும் நிலையில், தகுதியில் அரசுகள் உள்ளனவா?
அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் அல்லது தாங்கிக்கொள்ளும் நிலையில் மக்கள் உள்ளார்களா?
பாதிக்கப்படும் மக்களுக்கு அதிக பட்ச நட்ட ஈடு வழங்குவதன்மூலம் எத்தகைய முக்கியமான இடங்களையும் கட்டுமானங்களையும் கைப்பற்றி புதிய சென்னையை உருவாக்கும் துணிவு அரசுகளுக்கு இருக்கின்றதா?
அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தாங்கும் வல்லமை இருக்கிறதா?
இருக்கிறது என்றால் சென்னை புதிய சென்னையாக மாறும்!
இல்லாவிட்டால் இனி இந்த அவலம் தொடர்கதை ஆகும்.
அதிகமாகவும் ஆகும்!
சென்னை தோன்றாதபோது அங்கு நில அமைப்பு எப்படி இருந்திருக்கும்?
மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் ஆங்காங்கே இயற்கையாகவே அமைந்த தாழ்வான பள்ளதாக்குகளின் வழியாகவும் ஓடைகள் வழியாகவும் சிற்றாறுகளின் வழியாகவும் கடலுக்குச் சென்றிருக்கும்.
ஆதாவது இப்போது நீர் ஓடிக்கொண்டிருக்கும் அல்லது தேங்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலான இடங்களில் நீரைப் பார்க்க முடியாது.
மழையை மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் நீர் பெருக்கெடுக்காத மேட்டுப் பகுதிகளில் வீடுகள் ஆகும்போது மழை நீரை உறுஞ்ச வழி இல்லாததால் அந்த நீரும் சேர்ந்து மழை வெள்ளநீரின் அளவு இரட்டிப்பாகவே செய்யும்.
அதன்காரணமாகப் பெருகும் நீர் பாதிக்காமல் செல்லவேண்டுமானால் முன்னர் இருந்த நீர்வழிப் பாதைகளும் சிற்றாறுகளும் ஓடைகளும் முன்பிருந்ததைவிட ஆழமாகவும் அகலமாகவும் இரட்டிப்பு கொள்திறனுடன் ஆக்கப்படிருக்க வேண்டும்.
அப்படிச் செய்யவில்லை என்பது மட்டுமல்ல ஏற்கனவே இருந்த நீரோட்டப் பாதைகள் அனைத்தையும் நெருக்கிக் குறுக்கினோம். முடிந்தவரை தடுத்து மேடாக்கினோம்.
சுயநலத்துக்காக மக்கள் நலம் பலியிடப்பட்டது.
அதன் விளைவாக பெருமழைக் காலங்களில் மக்கள் வாழும் இடங்கள் ஏரிகளாகவும் தெருக்களெல்லாம் ஓடைகளாகவும் பெரிய சாலைகளெல்லாம் சிற்றாறுகளாகவும் அடையாறு, கூவம் போன்றவையெல்லாம் நதிகளாகவும் மாறிப்போயின!
இயற்கையின் கதிப்போக்கில் மக்கள் விடப்பட்டார்கள்.
இதற்கு முடிவு ஏற்படுமா?
சரியான அச்சமற்ற சென்னையாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளனவா?
அதற்காக எதையெல்லாம் செய்வது அவசியமோ அதையெல்லாம் செய்யும் நிலையில், தகுதியில் அரசுகள் உள்ளனவா?
அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் அல்லது தாங்கிக்கொள்ளும் நிலையில் மக்கள் உள்ளார்களா?
பாதிக்கப்படும் மக்களுக்கு அதிக பட்ச நட்ட ஈடு வழங்குவதன்மூலம் எத்தகைய முக்கியமான இடங்களையும் கட்டுமானங்களையும் கைப்பற்றி புதிய சென்னையை உருவாக்கும் துணிவு அரசுகளுக்கு இருக்கின்றதா?
அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தாங்கும் வல்லமை இருக்கிறதா?
இருக்கிறது என்றால் சென்னை புதிய சென்னையாக மாறும்!
இல்லாவிட்டால் இனி இந்த அவலம் தொடர்கதை ஆகும்.
அதிகமாகவும் ஆகும்!
No comments:
Post a Comment