வானகம்.... ஒரு வேண்டுகோள்!
வானகம் பற்றியும் நம்மாழ்வார் ஐயா பற்றியும் நான் எனது வலைதளத்திலும் முகநூலிலும் சில கட்டுரைகள் எழுதியிருந்தேன்.
அது வானகம் பொறுப்பாளர்களின் கவனத்துக்குச் சென்றதா என்பது தெரியவில்லை.
வானகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இயற்கை வேளாண் இயக்கத்தைப் பதிவு செய்து அதில் விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரையும் பதிவு செய்ய வேண்டும்.
அந்த இயக்கத்தின் தேர்வு செய்யப்பட்ட குழு வருங்காலத்தில் வானகத்தை வழி நடத்த வேண்டும்!
உறுப்பினர் கட்டணம் மூலம் குறைந்த பட்ச நிதியையும் திரட்ட முடியும்!
வானகத்தை இப்போது வழி நடத்தும் குழு எது?
அதில் யார் யார் இருக்கிறார்கள்?
யார் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி முடிவெடுக்கிறார்கள்?
அந்தக் குழுவின் உரிமையும் கடமைகளும் என்ன?
அந்தக் குழுவின் பொறுப்புக்காலம் எவ்வளவு?
அந்தக் குழுவை யார் தேர்வு செய்கிறார்கள்?
வானகம் சம்பந்தப்பட்ட அசையும் அசையாத சொத்துக்கள், வரவு செலவுக் கணக்குகள், போன்ற பல விபரங்கள் வெளிப்படையாகத் தெரியாத விஷயங்களாக உள்ளன.
அது வானகத்தின் வருங்காலத்துக்கோ நம்மாழ்வார் ஐயாவின் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துவதற்கோ உதவிகரமாக இருக்காது என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடியும்!
வானகத்தின் அனைத்து விபரங்களையும் கொண்ட விரிவான குறிப்புப் புத்தகம் உடனடியாக வெளியிடுவதே முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
அதுதான் வானகத்தின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது!
நம்மாழ்வார் ஐயா மீதும் வானகத்தின்மீதும் வைத்துள்ள நம்பிக்கை மேலும் மேலும் வலுப்பெறும் வண்ணம் வருங்காலம் இருக்கவேண்டும்.
சென்ற வருடம் வானகத்தில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க நானும் நண்பர் சத்தியமங்கலம் திருமூர்த்தியும் முடிவு செய்து நண்பர்களுக்கும் அறிவித்து ஒரு குழுவாக சென்றிருந்தோம்.
சென்ற அன்றே இரவு கலந்துரையாடலில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.
மறுநாள் மரக்கன்றுகள் நட குழிகள் தோண்டவும் செய்தோம்.
ஆனால் அதன் பின்னால் இப்படி ஒரு குழு வந்து சென்றது என்பதற்கான சுவடே இல்லை...
மக்களுக்கான பொது நிறுவனம் எதுவாக இருந்தாலும் அதை வழி நடத்த ஒரு திட்டமும் அதை அமல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஒரு குழுவும் இருக்கவேண்டும்.
அந்தக் குழு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பரிசீலிக்கப்பட்டு தேவையான மாற்றமும் செய்யப்படவேண்டும்.
நிதியாதாரங்கள் உருவாக்கப்பட்டு அது நேர்மையாகவும் திறமையாகவும் கையாளப்படவேண்டும்.
இந்த முறையில் வானகம் என்னும் சீரிய இயற்கை வேளாண்மை மையம் செயல்பட்டால் தவிர இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டின் தலைமைப் பீடமாக வானகத்தைத் தொடர்ந்து இயக்க முடியாது! கடைசியில் அடிப்படை லட்சியம் நம்மாழ்வார் ஐயாவின் படத்தை வணங்குவதோடு நின்று விடும்!
வானகம் நிர்வாகிகள் மனது வைத்தால் இந்த வருடம் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாளை ஒட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொண்ட சிறப்பு மாநாடாக நடத்தி வானகத்தை ஒரு எழுச்சிமிக்க இயற்கை வேளாண்மை தத்துவத்தின் தலைமைப் பீடமாக முறைப்படி அறிவிப்புச் செய்ய முடியும்.
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
இது தொடர்பான முகநூல் உரையாடல்....கீழே உள்ள இணைப்பில்...
https://www.facebook.com/photo.php?fbid=1004323296302016&set=pb.100001730669125.-2207520000.1453977666.&type=3&theater
வானகம் பற்றியும் நம்மாழ்வார் ஐயா பற்றியும் நான் எனது வலைதளத்திலும் முகநூலிலும் சில கட்டுரைகள் எழுதியிருந்தேன்.
அது வானகம் பொறுப்பாளர்களின் கவனத்துக்குச் சென்றதா என்பது தெரியவில்லை.
வானகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இயற்கை வேளாண் இயக்கத்தைப் பதிவு செய்து அதில் விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரையும் பதிவு செய்ய வேண்டும்.
அந்த இயக்கத்தின் தேர்வு செய்யப்பட்ட குழு வருங்காலத்தில் வானகத்தை வழி நடத்த வேண்டும்!
உறுப்பினர் கட்டணம் மூலம் குறைந்த பட்ச நிதியையும் திரட்ட முடியும்!
வானகத்தை இப்போது வழி நடத்தும் குழு எது?
அதில் யார் யார் இருக்கிறார்கள்?
யார் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி முடிவெடுக்கிறார்கள்?
அந்தக் குழுவின் உரிமையும் கடமைகளும் என்ன?
அந்தக் குழுவின் பொறுப்புக்காலம் எவ்வளவு?
அந்தக் குழுவை யார் தேர்வு செய்கிறார்கள்?
வானகம் சம்பந்தப்பட்ட அசையும் அசையாத சொத்துக்கள், வரவு செலவுக் கணக்குகள், போன்ற பல விபரங்கள் வெளிப்படையாகத் தெரியாத விஷயங்களாக உள்ளன.
அது வானகத்தின் வருங்காலத்துக்கோ நம்மாழ்வார் ஐயாவின் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துவதற்கோ உதவிகரமாக இருக்காது என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடியும்!
வானகத்தின் அனைத்து விபரங்களையும் கொண்ட விரிவான குறிப்புப் புத்தகம் உடனடியாக வெளியிடுவதே முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
அதுதான் வானகத்தின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது!
நம்மாழ்வார் ஐயா மீதும் வானகத்தின்மீதும் வைத்துள்ள நம்பிக்கை மேலும் மேலும் வலுப்பெறும் வண்ணம் வருங்காலம் இருக்கவேண்டும்.
சென்ற வருடம் வானகத்தில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க நானும் நண்பர் சத்தியமங்கலம் திருமூர்த்தியும் முடிவு செய்து நண்பர்களுக்கும் அறிவித்து ஒரு குழுவாக சென்றிருந்தோம்.
சென்ற அன்றே இரவு கலந்துரையாடலில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.
மறுநாள் மரக்கன்றுகள் நட குழிகள் தோண்டவும் செய்தோம்.
ஆனால் அதன் பின்னால் இப்படி ஒரு குழு வந்து சென்றது என்பதற்கான சுவடே இல்லை...
மக்களுக்கான பொது நிறுவனம் எதுவாக இருந்தாலும் அதை வழி நடத்த ஒரு திட்டமும் அதை அமல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஒரு குழுவும் இருக்கவேண்டும்.
அந்தக் குழு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பரிசீலிக்கப்பட்டு தேவையான மாற்றமும் செய்யப்படவேண்டும்.
நிதியாதாரங்கள் உருவாக்கப்பட்டு அது நேர்மையாகவும் திறமையாகவும் கையாளப்படவேண்டும்.
இந்த முறையில் வானகம் என்னும் சீரிய இயற்கை வேளாண்மை மையம் செயல்பட்டால் தவிர இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டின் தலைமைப் பீடமாக வானகத்தைத் தொடர்ந்து இயக்க முடியாது! கடைசியில் அடிப்படை லட்சியம் நம்மாழ்வார் ஐயாவின் படத்தை வணங்குவதோடு நின்று விடும்!
வானகம் நிர்வாகிகள் மனது வைத்தால் இந்த வருடம் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாளை ஒட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொண்ட சிறப்பு மாநாடாக நடத்தி வானகத்தை ஒரு எழுச்சிமிக்க இயற்கை வேளாண்மை தத்துவத்தின் தலைமைப் பீடமாக முறைப்படி அறிவிப்புச் செய்ய முடியும்.
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
இது தொடர்பான முகநூல் உரையாடல்....கீழே உள்ள இணைப்பில்...
https://www.facebook.com/photo.php?fbid=1004323296302016&set=pb.100001730669125.-2207520000.1453977666.&type=3&theater
No comments:
Post a Comment