ஒலிம்பிக் பெருமை!
ஒலிம்பிக்கில் ஓரிரு பதக்கங்களை வென்றது வென்ற வீரர் வீராங்கனைகளுக்குப் பெருமையே!... அதே நேரம் சில விபரங்களையும் எண்ணிப்பார்ப்பது அவசியம்..
இதை நமது நாட்டுக்கே கிடைத்த பெருமையாக நினைப்பது சரியா? அப்படியானால் பஞ்சத்தால் அடிபட்ட சின்னஞ்சிறு நாடுகள்கூட வாங்கும் அளவு பதக்கங்களை ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் நாம் வாங்கமுடியாமல் போவது சிறுமை அல்லவா? இதே வீராங்கனைகள் ஒரு சதவிகிதம் பின்தங்கிஇருந்தால்கூட இந்தப் பெருமை அவர்களுக்கும் நாட்டுக்கும் கிடைத்திருக்காது! அந்த ஒரு சதவிகிதத்தை நம்பித்தான் நமது தலை நிமிர்வும் தலைகுணிவும் இருக்கிறதா? அந்த ஒரு சதவிகிதத்தைத் தவற விட்டிருந்தால் அவர்கள் கவனிக்கப்பட்டிருப்பார்களா? பாராட்டுக்களாலும் பணத்தாலும் குளிப்பாட்டப்பட்டு இருப்பார்களா?
இந்த ஆரவாரம் எல்லாம் நமது பலவீனத்தை மக்களிடமிருந்து மறைக்கும் அவமானகரமான செயல்கள் ஆகும். அந்த வீராங்கனைகள் இந்தச் சாதனையை நிகழ்த்தாமல் இருந்திருந்தாலும் இதே மரியாதை அவர்களுடைய முயற்சிக்குக் கிடைத்திருக்கும் என்றால் நமது ஆரவாரம் நியாயமே! ஆனால் அலட்சியப்படுத்தப்பட்டு இருப்பார்கள்! அதனால் ஒருநூலிழையில் புகழ்ச்சியாய் மாறிய இகழ்ச்சியாகவே இதை நான் பார்க்கிறேன்.
உண்மையாகவே நமது பெருமை வாங்கும் பதக்கங்களில் இல்லை! நமது மக்களின் வாழ்வில் விளையாட்டும் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதிலும் அதனால் எல்லா விளையாட்டுக்களிலும் எண்ணற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை உருவாக்குவதிலும் அந்த அளவு பொருளாதார வளம் மிக்க நாடாக மாற்றுவதிலும்தான் பெருமை அடங்கியிருக்கிறது. இல்லாவிட்டால் எத்தியோப்பியாவையும் கிரேனடாவையும் விடப் பின்தங்கியிருக்கிறோம் என்று கவலைப்படுவதே நியாயம்!
ஒலிம்பிக்கில் ஓரிரு பதக்கங்களை வென்றது வென்ற வீரர் வீராங்கனைகளுக்குப் பெருமையே!... அதே நேரம் சில விபரங்களையும் எண்ணிப்பார்ப்பது அவசியம்..
இதை நமது நாட்டுக்கே கிடைத்த பெருமையாக நினைப்பது சரியா? அப்படியானால் பஞ்சத்தால் அடிபட்ட சின்னஞ்சிறு நாடுகள்கூட வாங்கும் அளவு பதக்கங்களை ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் நாம் வாங்கமுடியாமல் போவது சிறுமை அல்லவா? இதே வீராங்கனைகள் ஒரு சதவிகிதம் பின்தங்கிஇருந்தால்கூட இந்தப் பெருமை அவர்களுக்கும் நாட்டுக்கும் கிடைத்திருக்காது! அந்த ஒரு சதவிகிதத்தை நம்பித்தான் நமது தலை நிமிர்வும் தலைகுணிவும் இருக்கிறதா? அந்த ஒரு சதவிகிதத்தைத் தவற விட்டிருந்தால் அவர்கள் கவனிக்கப்பட்டிருப்பார்களா? பாராட்டுக்களாலும் பணத்தாலும் குளிப்பாட்டப்பட்டு இருப்பார்களா?
இந்த ஆரவாரம் எல்லாம் நமது பலவீனத்தை மக்களிடமிருந்து மறைக்கும் அவமானகரமான செயல்கள் ஆகும். அந்த வீராங்கனைகள் இந்தச் சாதனையை நிகழ்த்தாமல் இருந்திருந்தாலும் இதே மரியாதை அவர்களுடைய முயற்சிக்குக் கிடைத்திருக்கும் என்றால் நமது ஆரவாரம் நியாயமே! ஆனால் அலட்சியப்படுத்தப்பட்டு இருப்பார்கள்! அதனால் ஒருநூலிழையில் புகழ்ச்சியாய் மாறிய இகழ்ச்சியாகவே இதை நான் பார்க்கிறேன்.
உண்மையாகவே நமது பெருமை வாங்கும் பதக்கங்களில் இல்லை! நமது மக்களின் வாழ்வில் விளையாட்டும் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதிலும் அதனால் எல்லா விளையாட்டுக்களிலும் எண்ணற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை உருவாக்குவதிலும் அந்த அளவு பொருளாதார வளம் மிக்க நாடாக மாற்றுவதிலும்தான் பெருமை அடங்கியிருக்கிறது. இல்லாவிட்டால் எத்தியோப்பியாவையும் கிரேனடாவையும் விடப் பின்தங்கியிருக்கிறோம் என்று கவலைப்படுவதே நியாயம்!