சரிதானா?
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று பலரும் சொல்வதை அடிக்கடி கேட்கிறோம்.
அது சரியானதுதானா?
தாங்கள் விரும்பும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க மக்களுக்கு உள்ள உரிமை ஆசிரியர்களுக்கும் உள்ளது.
அதைத் தடுக்க முடியாது.
காரணம் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரமும் வசதிகளும் அவர்கள் விரும்பும்படி இல்லை.
அதற்கான பழியை ஆசிரியர்களின்மேல் போடுவது சரியாகாது.
ஆசிரியர்களை நியமிப்பதும் அவர்களுக்கான கடமைகளை வகுப்பதும் அரசுகளும் அதன் கல்வித் துறைகளுமே!
அவர்கள் சோரம்போய் அரசுப் பள்ளிகளை நாசம் செய்ததற்கு ஆசிரியர்கள் மட்டும் எப்படிப் பொறுப்பு?
அவர்கள்தான் பொறுப்பு என்றால் அவர்கள்மேல் ஈவிரக்கமில்லாமல் தக்க நடவடிக்கை எடுக்கட்டும்!
அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் வசதிகளையும் தனியார் பள்ளிகளைவிட அதிகமாக்கட்டும்!
அதுதான் நியாயம்.
ஆசிரியர்கள் அனைவருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. காரணம் அவர்கள் அனைவரும் மதிக்கத் தக்கவர்களாக இல்லை! ஆனால் நல்லவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று பலரும் சொல்வதை அடிக்கடி கேட்கிறோம்.
அது சரியானதுதானா?
தாங்கள் விரும்பும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க மக்களுக்கு உள்ள உரிமை ஆசிரியர்களுக்கும் உள்ளது.
அதைத் தடுக்க முடியாது.
காரணம் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரமும் வசதிகளும் அவர்கள் விரும்பும்படி இல்லை.
அதற்கான பழியை ஆசிரியர்களின்மேல் போடுவது சரியாகாது.
ஆசிரியர்களை நியமிப்பதும் அவர்களுக்கான கடமைகளை வகுப்பதும் அரசுகளும் அதன் கல்வித் துறைகளுமே!
அவர்கள் சோரம்போய் அரசுப் பள்ளிகளை நாசம் செய்ததற்கு ஆசிரியர்கள் மட்டும் எப்படிப் பொறுப்பு?
அவர்கள்தான் பொறுப்பு என்றால் அவர்கள்மேல் ஈவிரக்கமில்லாமல் தக்க நடவடிக்கை எடுக்கட்டும்!
அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் வசதிகளையும் தனியார் பள்ளிகளைவிட அதிகமாக்கட்டும்!
அதுதான் நியாயம்.
ஆசிரியர்கள் அனைவருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. காரணம் அவர்கள் அனைவரும் மதிக்கத் தக்கவர்களாக இல்லை! ஆனால் நல்லவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
No comments:
Post a Comment