நான்
ஆதாவது பெருவெடிப்பால் உருவான பிரபஞ்சம் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்களாக முடிவற்ற திசையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது.
ஆதாவது பெருவெடிப்பால் உருவான பிரபஞ்சம் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்களாக முடிவற்ற திசையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது.
ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களுடன் சுழன்றுகொண்டே பயணித்து வருகிறது.
ஒவ்வொரு நட்சத்திரமும் தன்னைத்தானே சுழன்றுகொண்டும் தான் அங்கம் வகிக்கும் நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து சுழன்று கொண்டும். இருக்கிறது.
அதே மாதிரி ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பல கோள்களும் அந்தக் கோள்களை எண்ணற்ற துணைக்கோள்களும் சுற்றி வருகின்றன.
இத்தனையுமாக வேடந்தரித்திருக்கும் அளவிடமுடியாத அணுக்களின் கூட்டமும் தன்னுள் எண்ணற்ற இயக்கங்களைக் கொண்டு உள்ளன.
இதன் ஒரு அங்கமாக நாம் வாழும் பூமியும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் சூரியனையும் சுற்றிக்கொண்டும் பால்வெளி மண்டலத்துக்குள்ளும் சுற்றிக்கொண்டும் பிரபஞ்சப் பயணத்தையும் தொடர்ந்துகொண்டு தனித் தன்மையுடன் உள்ளதல்லவா?
அந்த பூமியின் இயக்கத்துக்கு இணையானதுதான் நான் என்கிற உணர்வு ஆகும்.
அது தனக்குத் தானேயும் இயங்கும் .
தன்னைச் சுற்றி நடக்கும் பேரியக்கத்திலும் ஒரு அங்கமாகவும் விளங்கும் .
பூமி ஒன்றாக இருந்தாலும் அதனுள் மா
கடல்களும் பெரும் மலைகளும் பிரளயங்களும் பசுமையான காடு வனங்களும் எண்ணற்ற உயிரினங்களும் அவற்றுக்குண்டான இயல்புப்படி இயங்குவதுபோலவே நான் என்கிற உணர்வும் எண்ணற்ற விதமாக எண்ணற்ற பண்புகளுடன் வெளிப்படக் கூடியது.
அந்த இயக்கத்தைத் தாங்கி நிற்கும் மையமான பரு உடலானது அதன் இயக்கத்தை நிறுத்தும்போது அதில் அடங்கியுள்ள நான் என்கிற விசையும் நின்று போகிறது!
அதுதான் நான்!
No comments:
Post a Comment