பூசனிக்காய்க்கு
ஓர் ஆசை!
காய்களின் அரசன்
தான் ஆக !
கூவி அழைத்தது
அனைவரையும்
என்னை எதிர்ப்பவன்
யாரென்று!
அச்சங்கொண்ட
எவராலும்
எதிர்த்துப் பேச
இயலாதே!
சுண்டைக்காய்தான்
முன்வந்து
துணிந்து நின்றது
மல்லுக்கு!
என்னோடு மோத
இவனா என்று
ஏளனம் செய்தது
பூசனிக்காய்!
கூவி அழைத்தது
சுண்டைக்காய்
யாரேனு மொருவர்
வாருமென்று!
இருவரையும் - தூக்கி
ஏறியுங்கள்
வலியவன் யாரெனப்
பாருமென்று!
ஓட்டம் பிடித்தது
பூசனிக்காய்,
அரசன் ஆனது
சுண்டைக்காய்!
ஓர் ஆசை!
காய்களின் அரசன்
தான் ஆக !
கூவி அழைத்தது
அனைவரையும்
என்னை எதிர்ப்பவன்
யாரென்று!
அச்சங்கொண்ட
எவராலும்
எதிர்த்துப் பேச
இயலாதே!
சுண்டைக்காய்தான்
முன்வந்து
துணிந்து நின்றது
மல்லுக்கு!
என்னோடு மோத
இவனா என்று
ஏளனம் செய்தது
பூசனிக்காய்!
கூவி அழைத்தது
சுண்டைக்காய்
யாரேனு மொருவர்
வாருமென்று!
இருவரையும் - தூக்கி
ஏறியுங்கள்
வலியவன் யாரெனப்
பாருமென்று!
ஓட்டம் பிடித்தது
பூசனிக்காய்,
அரசன் ஆனது
சுண்டைக்காய்!
very nice
ReplyDelete