ஆனந்த வாழ்வு
தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றபடி அதிகப்படியான சொத்துக்களைச் சேர்த்துத் திருப்தியடையலாம்.
அல்லது இருக்கும் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்றபடி தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் குறைத்துக்கொண்டு அதன்மூலமும் திருப்தியடையலாம்.
மனத்தளவில் இரண்டின் மதிபபும் ஒன்றுதான்.
ஆனால் முன்னது தாற்காலிகமானது. பின்னது நிரந்தரமானது.
இரண்டாவது வகையினருக்கு வசதிவாய்ப்புகள் பெருகினாலும் ஆரவாரமான வாழ்வை விரும்;பமாட்டார்கள். அத்தகையவர்களே வாழ்வை அனுபவிக்கத் தெரிந்தவாகள் ஆவர்.
அவர்களிலும் உயர்ந்த பண்பும் சமூக நோக்கும் கொண்டோர் மேன்மக்களாகவே போற்றப்படுவர்.
அத்தகைய போற்றுதலுக்குரிய வாழ்வுக்கு ஈடுஇணையே கிடையாது.
இந்த உண்மையை உணர்ந்திடில் ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் ஆனந்தமயமான வாழ்வு வாழலாம்.
வாழமுடியும்.
--------------------------------------------------------------------------------------------------------
=====================================================================
---------------------------------------------------------------------------------------------------------
சொந்தமும் இரவலும்.
உலகையும் வாழ்வையும் கூர்ந்து கவனிப்பது மேலானது.
அவற்றைப் பற்றிக் கற்க முயல்வதும் கற்பதும் அதனினும் மேலானது.
கற்பதைச் சரியாக உணர்வது அதனினும் மேலானது.
உணர்ந்ததை உலகவாழ்வுடனும் அனுபவங்களுடனும் பொருத்திப்பார்த்து அறிவை வளர்த்துக்கொள்தல் அதனினும் மேலானது.
அந்த அறிவின் உயர்ந்த நிலையாம் ஞானத்தைக்கொண்டு உலக நடப்புக்களை ஆராய்தல் அதனினும் மேலானது.
அந்த ஆய்வின் வெளிப்பாடுகளைப் பிறர்க்கும் தெளிவிப்பதும் கற்பிப்பதும் அதனினும் மேலானது!
இத்தனை படிகள் தாண்டிச் செய்யவேண்டிய ஒன்றை யாரோ எழுதிவைத்துச் சென்றதை நூல்களிலிருந்து காபி எடுத்து அப்படியே சமூக வலைத் தளங்களில் பேஸ்ட் செய்துவிட்டு அதைப் பற்றி விளக்குவதற்குக்கூட முடியாமல் தவிப்பவர்கள் நிறையப்பேர் உள்ளனர்!
அவர்கள் வெளிப்படுத்தும் விஷயங்களுக்கு அவர்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும்?
--------------------------------------------------------------------------------------------------------
=====================================================================
---------------------------------------------------------------------------------------------------------
சொந்தமும் இரவலும்.
உலகையும் வாழ்வையும் கூர்ந்து கவனிப்பது மேலானது.
அவற்றைப் பற்றிக் கற்க முயல்வதும் கற்பதும் அதனினும் மேலானது.
கற்பதைச் சரியாக உணர்வது அதனினும் மேலானது.
உணர்ந்ததை உலகவாழ்வுடனும் அனுபவங்களுடனும் பொருத்திப்பார்த்து அறிவை வளர்த்துக்கொள்தல் அதனினும் மேலானது.
அந்த அறிவின் உயர்ந்த நிலையாம் ஞானத்தைக்கொண்டு உலக நடப்புக்களை ஆராய்தல் அதனினும் மேலானது.
அந்த ஆய்வின் வெளிப்பாடுகளைப் பிறர்க்கும் தெளிவிப்பதும் கற்பிப்பதும் அதனினும் மேலானது!
இத்தனை படிகள் தாண்டிச் செய்யவேண்டிய ஒன்றை யாரோ எழுதிவைத்துச் சென்றதை நூல்களிலிருந்து காபி எடுத்து அப்படியே சமூக வலைத் தளங்களில் பேஸ்ட் செய்துவிட்டு அதைப் பற்றி விளக்குவதற்குக்கூட முடியாமல் தவிப்பவர்கள் நிறையப்பேர் உள்ளனர்!
அவர்கள் வெளிப்படுத்தும் விஷயங்களுக்கு அவர்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும்?
No comments:
Post a Comment