நமது கதியும்.......!
இது என்ன தெரிகிறதா?
தனது தந்தையின் கரங்களால் புதைக்கப்படும் ஒரு குழந்தை!
வேறு யாருமற்ற நிலை!
தனது வாழ்வுகூட உறுதியற்ற நிலை!
தனது பிஞ்சுக் குழந்தையின் சடலத்தை அப்படியே எறிந்துவிட்டுப் போய்த் தான் பிழைக்க மனமில்லாத ஒரு தந்தை வேறு என்னதான் செய்வான்?
இப்படிச் சாவதற்கா அவர்கள் பிறந்தார்கள்?
ஆம். இதுமட்டுமல்ல இது போல் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியான பல பல்லாயிரம் மக்கள் நடைப்பிணமான மற்றவர்களும் மனதளவில் பிணமாகிப்போன ஒரு துயரம் உலகில் எங்கு நடந்தது?
வேறு எங்கும் அல்ல. நமது நாட்டில்தான்!
நடந்து இருபத்தியெட்டு ஆண்டுகள் ஆகின்றன.
அதுதான் போபால் விஷவாயுத் துயரம்!
தப்பிப் பிழைத்தவர்களுக்கோ இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கோ இதுவரை எந்த உதவியும் வழங்கப்படவில்லை!
இன்றைய நிலையில் உயர் அதிகாரம் படைத்த ஒருவர் கைக்கூலியாகப் பெரும் அளவுகூட தேவைப்படாது அந்த நிவாரணத்துக்கு!
இந்திய நாட்டில் பிறந்ததைத் தவிர அபர்கள் ஒரு பாவமும் செய்யவில்லை!
அவர்களுக்காக தாங்கள் வாங்கும் கைக்கூலியில் ஒரு பகுதியைக்கூட விட்டுக்கொடுக்காத பாவிகள் ஆளும் நாட்டில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம்!
அவர்கள் மட்டுமல்ல. நாம் அனைவரும் இந்த நாட்டில்தான் வாழ்கிறோம்.
நாளை நமக்கும்நமது சந்ததிகளுக்கும் இத்தகைய ஆபத்து காத்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் மறப்பதற்கு இல்லை!
நாளை நாமும் இப்படிக்கொல்லப்பட்டு அநாதைப் பிணங்கள் ஆகலாம்! நம்மைக்கொல்லும் குற்றவாளிகளும் குறைவின்றிவாழலாம்! நாட்டையும் ஆளலாம்!
இந்த நிலையில் வாழும் பிழைப்பும் ஒரு பிழைப்பா?
சிந்திப்போமே!
கொடுமை சார் !
ReplyDeleteதொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி...
நன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!
Delete