எட்டப்பன் மொட்டை!
=====================
எட்டப்பன் தோட்டத்தில்
பட்டுப்போல் பருத்தி
பாங்குடனே வெடித்துப்
பட்டகடன் தீர்ந்துவிட்டால்
மொட்டை அடிப்பதென்று
மொட்டையை வேண்டினான்.
எட்டப்பன் மனைவி கெட்டிக்காரி!
தையிலோ மாசியிலோ
தன மகள் வள்ளிக்குக்
கல்யாணம் செய்யவென்று
முழுமூச்சாய்ப் பாடுபட்டாள்!
தையும் பிறந்தது.
வளமான மகசூலை
வழங்குதர்க்குப் பதிலாக
வாடல்நோய் விழுந்து
வாடி வதங்கியதால்
கொட்டைப் பருத்திதான்
குவிந்தது மலையாக!
பட்டகடன் கட்ட
முடியாமல் போனாலும்
வள்ளியின் கல்யாணம்
தள்ளிப் போனாலும்
எட்டப்பன் பழனி
மொட்டைக்கு விட்டமுடி
எட்டங்குல நீளம்
வளர்ந்ததில் தப்பில்லை.
ஆஹா!.....
அவனே புண்ணியவான்!......
வரிகளில் ஒரு கதையையே சொல்லி விட்டீர்கள் சார்...
ReplyDelete