உணவு - மூன்றும் இரண்டும்
நண்பர்களே! நான் என்ன நினைக்கிறேன் என்றால் மற்ற உயிரினங்களெல்லாம் பசித்தபோதும் கிடைத்தபோதும் உண்கின்றன. மனிதனும் ஆதியில் அப்படித்தான் உண்டிருக்கவேண்டும்.
ஆனால் நாகரிகம் வளர்ந்தபின்னால், மனிதனின் வாழ்க்கை முறைகள் மாறிய பின்னால், குறிப்பிட்ட பணிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்வது என்ற பழக்கம் ஏற்ப்பட்டதால் உணவு உண்பதற்கும் நேரம் நிர்ணயிக்கப்பட்டது.
அதைக் காலை நண்பகல் இரவு என முக்கியமாக மூன்று வகையாகப் பிரித்து நடைமுறையில் உள்ளது.
அந்த நேரத்தில் பசி ஆனாலும் ஆகாவிட்டாலும் உண்ணவேண்டிய கட்டாயத்தால் உண்கிறோம்.
சிலருக்கு முன்பே பசிக்கிறது. சிலருக்கு குறிப்பிட்ட நேரம் ஆனாலும் பசி இருப்பதில்லை.
இவை இரண்டுக்கும் காரணம் முந்தைய நேரம் உண்ட உணவும் இடையில் நமது உடம்பில் இருந்து செலவான சத்துக்களும் ஆகும்.
இது அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
முன்கூட்டியே பசிஎடுத்துக் குறிப்பிட்டநேரம்வரை காத்திருந்து உண்பதால் தீங்கு நேர்வது இல்லை.
ஆனால் குறிப்பிட்ட நேரம் ஆகிவிட்டதால் உண்ணவேண்டும் என்கிற பழக்கத்துக்காகவும் சுவைக்காகவும் உண்ணும்போது அது தீய விளைவுகளையே ஏற்படுத்துகிறது.
அதனால் பசியில்லாமல் உண்ணுவதைவிட உண்ணத் தாமதப் படுத்துவது தவறல்ல என்று ஆகிறது.
தவிர எந்த ஒரு விரதமும் உண்ணுவதைத் தாமதப்படுத்துவதையும் கட்டுப்படுத்துவதையும்தான் வலியுறுத்துகின்றன.
காரணம் அதுதான் தேவையில்லாமல் உடம்பில் உள்ள கூடுதல் சத்துக்களையும் கரைத்து உடல்நலனை மேம்படுத்துகின்றன.
அதனால்தான் பலநேர உணவை மூன்றுநேர உணவுப்பழக்கமாக மாற்றிக்கொண்டதுபோலவே அதுவே அதிகம் எனும்போது இருநேர உணவுப் பழக்கமும் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்றும் கிராமங்களில் இருநேரம் மட்டுமே உண்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
அவர்கள் மற்றவர்களைப் போலவே உழைத்தாலும் மற்றவர்களைவிட நலமாக இருப்பதையும் காணலாம்.
அதனால் துவக்கத்தில் சில நாட்களுக்கு பழக்கத்தால் அசவுகரியமாக இருந்தாலும் பழக்கத்தால் இருநேர உணவுப்பழக்கம் குறிப்பிட்ட வயதுக்குமேல் நல்லது என்று நினைத்ததால் பின்பற்றுகிறேன்.
பசியுணர்வைத் தவிர வேறு பிரச்சினைகள் ஒன்றும் இல்லை.
உண்ணாமல் விடும் ஒருநேரத்தில் ஏதேனும் திரவ உணவோ பானமோ எடுத்துக்கொண்டால் அதைக்கூட மற்ற இரு நேர உணவில் சரி செய்து நலம் பெறலாம் என நினைக்கிறேன்.
முன்னோர்கள் சொன்ன ஒரு முதுமொழி உண்டு!
ஒரு வேளை உண்பவன் யோகி!
இருவேளை உண்பவன் போகி!
மூன்றுவேளை உண்பவன் ரோகி!
வேடிக்கையாக ஒரு நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது......நான்கு வேளை உண்பவன் (உடம்புக்கு) துரோகி என்று!
நாம் யோகி ஆகாவிட்டாலும் பரவாயில்லை ரோகியாக ஆகாமலாவது வாழ்வோம்!
விளக்கங்களுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteகாலையில் முழு அளவு...
மதியம் பாதி அளவு...
இரவு கால் அளவு...
நல்லது நண்பரே! உணவே மருந்து!
ReplyDelete