பனையரசம்மா!
இது ஒரு அதிசயப் பனைமரம்!
எங்கள் தோட்டத்துக்குப் பக்கத்தில் வேறொரு பக்கம் எடுத்தது!
பனைமரம் அரசமரத்தைத் தாங்கிக்கொண்டு உள்ளது!
அந்த பூமிக்குச் சொந்தக் காரருக்கு இன்னும் ஐடியா வரவில்லை!
இல்லாவிட்டால் அங்கு எதோ ஒரு சாமி குடிகொண்டிருப்பதாகக் கனவில் வந்து சொன்னதாகச் சொல்லி பெரிய அளவு பக்தி வியாபாரத்தைத் துவங்கி இருக்கலாம்.
கீழ்மருவத்தூரைப்போல ஒரு புண்ணிய இடமாக்கியிருக்கலாம். ஏனோ அவருக்குத் தோணவில்லை!
யாருக்காவது அப்படி ஒரு ஐடியா இருந்தால் அதை வெட்டும் முன்பே நல்ல விலைக்கு வாங்கித் தொழிலை ஆரம்பிக்கலாம்! அருள்மிகு சுயம்பு பனையரசம்மா என்று பெயர்வைத்துக்கொண்டு பட்டையக் கிளப்பலாம்!
மக்களும் அம்மா அம்மா என்று உங்களை அம்மாவாக்கிக் காலில் விழுந்து காசையும் கொட்டுவார்கள்!
என்னாலான யோசனையைச் சொல்லிவிட்டேன்.
என்னையும் கவனியுங்கள்!
வியப்பாக இருக்கிறது...
ReplyDelete