ஒழுக்கத் தூண்கள்!
மாதா ,பிதா, குரு தெய்வம் என்பார்கள்.
இந்த மூன்று வகையினர் மூலமும் வருங்கால சந்ததிகள் அவர்கள் ஆண்களாயினும் பெண்களாயினும் சிறந்த ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
ஆனால் இந்த மூன்று வகையினரின் சராசரிப் பண்புகள் போற்றப்ப்படும்படி இல்லை!
அதனால் இளந்தலைமுறையினர் சரியான வழிகாட்டுதலையும் முன்னுதாரணத்தையும் பெறுவதில்லை!
அதைத் தொடர்ந்து தவறுகள் நடப்பது சமூக இயல்பாகிவிடுகிறது!
அதனால் குறிப்பிட்ட ஒரு பகுதியினரைக் குறை சொல்வதைவிட இந்த இற்றுப்போன சமுதாய ஒழுக்கத் தூண்களை வலுப்படுத்த வேண்டும்!
நோய் ஒரு பக்கம் இருக்க மருத்துவம் ஒரு பக்கம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை!
பயன் கிடைக்காது!
No comments:
Post a Comment