அந்தக் காலத்தில் எங்கள் பாட்டி ஒரு கதை சொல்வார்கள். கேளுங்கள்!
மூதேவி
------------
ஒரு வீட்டின் முன் வாசலின் ஒரு மூதேவி உள்ளே நுழைவதற்காக நீண்ட நாள் காத்திருந்ததாம்.
ஆதாவது மூதேவி ஒரு வீட்டுக்குள் நுழைய வேண்டுமானால் அங்கு வேண்டாத குணங்கள் இருக்கவேண்டும்! சண்டை சச்சரவு இருக்க வேண்டும்!
ஆனால் அந்த வீட்டில் அப்படியெல்லாம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருந்தார்கள்!
அதனால் மூதேவிக்கு வழி கிடைக்கவில்லை.
ஒரு நாள் அந்த வீட்டு மருமகள் வெண்ணையை நெய்யாக உருக்கி மண்பாத்திரத்தில் எடுத்துச் சென்றாள்.
அப்போது தவறுதலாகக் கைநழுவி கீழே விழுந்து உடைந்து வீட்டின் தரையெல்லாம் நெய்யாக ஓடியது!
அதைப்பார்த்து மூதேவிக்கு ஒரே குஷி! அப்பாட! இன்னைக்குத்தான் வீட்டுக்குள் நுழைய நேரம் வந்தது என்பதுதான் காரணம்! மாமியார் எப்படி திட்டாமல் இருக்க முடியும்? அப்போது நுழையலாம் அல்லவா?
மாமியார் உள்ளே வந்தவுடன் நெய் கொட்டிப் போய் இருந்ததையும் மருமகள் கையைப் பிசைந்துகொண்டிருந்ததைப் பார்த்ததும் முகம் ரொம்ப மாறி விட்டது!
மருமகளை அருகில் அழைத்தார்.
ஏம்மா, இதுக்கா இவ்வளவு விசனத்தோட நின்னுட்டிருந்தே! போனாப் போகுது. விடு! நான் ரொம்பநாளா நெய்யால வீடு மெழுகலாம்னு இருந்தேன். இன்னைக்கு தானாகவே அப்படி ஆயிட்டுது நல்லது வீடுபூராவும் துடைச்சு விட்டுடு! அப்படின்னாராம்!
மூதேவி ஆடிப்போய் விட்டாளாம்.
சே! இவங்க வீட்டுலையா இத்தனைநாள் காத்துட்டு இருந்தோம்னு சொல்லி எடுத்ததாம் ஓட்டம்!......
===================================================
மாமியா மருமக உறவு இப்படி இருக்கணும் என்பதுதான் கதையின் கருத்து!
சுபாஷ் ஐயா! ரொம்ப அருமையான கதை. எல்லோரும் பின்பற்றினா எல்லா வீடுகளும் அமைதிப் பூங்கா ஆகிவிடும்.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
தங்கள் பாராட்டுக்கு நன்றி அம்மா!
ReplyDelete