கேள்வி:
எதிர்ப்பு சக்தி போதுமான அளவு இருக்கும்வரை மருத்துவம் தேவையில்லை என்கிறீர்கள்! அப்படியானால் நோயெதிர்ப்பு சக்தியின் அளவை எவ்வாறு அறிந்து கொள்வது? அதன் அளவுகோல் என்ன?
எனது பதில்:
அதற்கு அலோபதி மருத்துவத்தில் பல அளவுகோல்கள் இருக்கலாம் நண்பா!
நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை!
ஒரு குழந்தை பசித்தால் ஒருவிதமாக அழும்.
வலித்தால் ஒருவிதமாக அழும்.
அதைத் தாய் உணர்வாள்!
அதுபோல ஒரு நோய் வரும்போது அதற்கான அறிகுறிகள் முன்னமே தென்படும்.
உதாரணம் காய்ச்சல், மலச் சிக்கல், தூக்கமின்மை, பசியின்மை, இருமல், தும்மல் போன்றவை!
அப்படிப்பட்ட அறிகுறிகள் வரும்போது அதற்கான காரணங்களை ஆராய்ந்து உணவின்மூலமோ மருந்தின்மூலமோ சரிப்படுத்திக்கொள்ளலாம்!
தவறு நடந்தால் பதில் நடவடிக்கை எடுக்கலாம்!
தவறு செய்துவிட்டால் என்ன செய்வது என்று முன்கூட்டி வடவடிக்கை எடுக்கவேண்டியது இல்லை!
அதுபோல் இயற்கை நல்வாழ்வுப் படி சரியான முறையில் உண்டு,உழைத்து வாழ வேண்டும்.
நோய் அறிகுறி தென்பட்டால் மட்டுமே பதில் நடவடிக்கை இருக்க வேண்டும்!
அறிகுறி இல்லையேல் அச்சப்படத் தேவை இல்லை!
அதனால் நோயெதிர்ப்பு சக்தி பற்றி அறிந்துகொள்ளவேண்டிய அவசியமும் அதற்கான அளவுகோலும் தேவை இல்லை!
கொள்ளைநோய் எதிர்ப்பு சக்திக்கு அலோபதியில் தடுப்பு மருந்துகள் உள்ளன.....
No comments:
Post a Comment