மத்திய மாநில அரசுகள்
மாநிலங்கள் தங்களுடைய தேவைகளைத் தீர்க்கத் தங்களின் வளங்களையும் மனித சக்தியையும் வைத்துத் திட்டமிடவேண்டும்.
மத்திய அரசை வெளியுறவுக்கும் பாதுகாப்புக்கும் தவிர வேறு எதற்கும் எதிர்பார்க்கக்கூடாது!
காரணம் அவர்கள் வேறு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்!
தங்கள் சொந்த முயற்சிகளுக்கும் தடையாக மத்திய அரசு இருக்கும் என்றால் அது பிரிவினைவாதத்தை ஆதரிப்பதற்குச் சமம் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தவேண்டும்!
ஒரு காலனி நாட்டுக்கும் அந்நிய அரசுக்கும் உள்ள உறவுதான் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் என்றால் ஒன்று தனது சொந்தக்காலில் இருக்கும் அதிகாரத்தைவைத்து முன்னேறவேண்டும்.
அல்லது கூடுதல் அதிகாரத்துக்காகப் போராடவேண்டும்.
இரண்டும் முடியாதென்றால் பிரிவினைக் கோரிக்கை தவிர்க்க முடியாதது ஆகிவிடும்!
No comments:
Post a Comment