நோயும் மருந்தும்
நாம் பிறந்ததில் இருந்து சாகும் வரை ஒவ்வொரு வினாடியும் நமது உடம்பில் இருந்து கோடிக்கணக்கான அணுக்கள் வெளியேறுகின்றன.
அவற்றை ஈடு செய்யவும் வளரவும் கோடிக்கணக்கான அணுக்கள் உணவு மூலமும் காற்றுமூலமும் உள்ளேயும் செல்கின்றன!
இது குறிப்பிட்ட ஒழுங்கமைவுடன் ஓயாமல் நடக்கிறது!
அதுதான் வாழ்க்கை!
இந்த இயக்கத்தில் தடங்கல் ஏற்படும்போது அது நோயாக உணரப்படுகிறது!
தன்மையமாக்கல், வெளியேறுதல் இவை இரண்டில் எது தேவைக்கு அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் அது நோய் ஆகும்!
அதைச் சரிசெயவதே மருத்துவம் ஆகும்!
இந்த இயக்க முறையைச் சீர்குலைக்கும் விதத்தில் வெளியில் இருந்து கிருமிகளாலோ மற்ற சூழல்கலாலோ நேரும் தாக்குதல் வேறு விதமான நோய்கள் ஆகும்.
அத்தகைய நோய்களை ஏற்கனவே இருக்கும் முறையான இயக்க அமைப்பு எதிர்த்துப் போராடும் பண்பையே எதிர்ப்பு சக்தி என்கிறோம்.
அது போதுமான அளவு இருக்கும் வரை மருத்துவம் தேவைப்படுவதில்லை!
இயலாதபோது மருத்துவம் செய்ய வேண்டி வருகிறது!
சுருக்கமாகச் சொன்னால் உடலுக்குத் தேவையற்ற குப்பைகள் தங்குவதும் தேவையான சத்துக்கள் பற்றாக்குறை ஆவதும் நோய்கள் எனலாம்!
அவற்றை நிவர்த்தி செய்வதை மருத்துவம் எனலாம்!
நோய்களை எதிர்ப்பு சக்தியின் மூலமும் மருத்துவத்தின்மூலமும் சரி செய்ய முடியாமல் போகும்போது ஒட்டு மொத்த இயக்கமும் பலவீனம் அடைந்து கடைசியில் நின்று விடுகிறது!
அதுதான் மரணம்!
அல்லது உயிர் நீத்தல்!
No comments:
Post a Comment