ஆனால் கடந்த காலமும் எதிர்காலமும்தான் மிகப்பெரியது. எல்லையற்றது.
நிகழ்காலமோ நாமாக ஏதாவது ஒரு நேரத்தையோ நிகழ்வையோ குறிப்பிட்டு அதைத்தான் நிகழ்காலம் என்று சொல்லிக்கொள்ள வேண்டும். அதற்கென ஒரு காலம் இல்லை!
காரணம் எதிர்காலம் நேரடியாக இறந்த காலமாக மாறுகிறதே அல்லாமல் நிகழ்காலம் என்ற ஒன்றுக்குள் பிரவேசிப்பதே இல்லை!
எதிர்காலமும் இறந்தகாலமும் சேர்ந்த ஒரு சிறுபகுதியை, நமது வாழ்க்கைப்பயணத்தின் அவ்வப்போதைய நிலையை நிகழ்காலமாக வைத்துக்கொள்கிறோம்.அவ்வளவே!
ஆதாவது ஒவ்வொரு விநாடியும் நாம் இறந்த காலத்திலிருந்து எதிர்காலத்துக்குள் நுழைந்துகொண்டு இருக்கிறோம். அல்லது எதிர்காலத்தை இறந்தகாலமாக்குகிறோம்.
இந்தப் பதிவைத் துவங்கும்போது எதிர்காலமாக இருந்தது அதை முடிக்கும்போது இறந்தகாலம் ஆகிவிட்டது! இதில் நிகழ்காலம் எங்கே?
No comments:
Post a Comment