மொழியின் வீழ்ச்சி!
மொழி என்பது கற்பதற்கும் தொடர்பு கொள்வதற்கும் வாழ்வதற்குமான ஒரு சாதனம்!
அதுவே அறிவாகிவிடாது!
ஆனால் நம் நாட்டில் அதை அறிவுக்கும் தகுதிக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுவதால் தாய்மொழியை விட ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது!
மொழிகளில் ஏற்றத் தாழ்வு இல்லை!
அதில் எந்த மொழி மக்களின் வாழ்வில் அதிகப் பயனுடையதாக இருக்கிறதோ அது வாழும் வளரும்.
அப்படி அல்லாதவை மெல்ல மெல்லத் தேய்ந்து மறையும்!
அதற்கு எந்த மொழியும் விதிவிலக்கு அல்ல!
அப்படி நடக்கக் கூடாது என்றால் அந்த மொழி மக்களின் முழுப் பயன்பாட்டில் இருக்க வேண்டும்!
No comments:
Post a Comment