ஆறிய புழுதியும் பச்சைப் புழுதியும்....
ஆறின புழுதி இருந்து வெள்ளாமை செய்தா நல்லா இருக்கும்.
பச்ச புரட்டி வெள்ளாமை செய்யக் கூடாது ....
இப்படியான சொற்களை கிராமங்களில் முன்னர் அடிக்கடி கேட்கலாம்...
காரணம் என்ன?
தெரிந்து கொள்வது மிகவும் நல்லது நண்பர்களே!......
பொதுவாக மண்ணின் மேல் ஏறக்குறைய முக்கால் அடிக்கு உள்ளாகத்தான் நுண்ணுயிகள் அதிகமாக வாழ்கின்றன,
அவைதான் நிலத்தில் விழும் அனைத்தையும், முந்தைய பயிர்களின் கழிவுகளையும் மக்க வைக்கின்றன.
அப்படி மக்கச் செய்வதற்காகத்தான் உழவு செய்வதன்மூலம் மேல் மண்ணையும் அதில் கிடப்பவற்றையும் கலக்குகிறோம்.
அதன் காரணமாக மண்ணின் அடியில் உள்ள ஈரத்தைப் பயன்படுத்தி நுண்ணுயிர்கள் பொருட்களை மக்கச் செய்வதோடு மண்ணுக்குள் சுலபமாக நடமாடவும் வழி ஏற்ப்படுகிறது...
மழைநீர் அல்லது பாய்ச்சும் நீர் எளிதில் வேர்களுக்குச் சத்துக்களை எடுத்துச் செல்லவும் ஈரத்தைச் சேமிக்கவும் பயன்படுகிறது.
அதே சமயம் ஈர மண்ணில் பச்சை புரட்டிப் பயிர் செய்யும்போது நுண்ணுயிர்கள் தாவரங்களுக்குக் கிடைக்கவேண்டிய ஈரம் உட்படப் பலவற்றைத் தான் எடுத்துக்கொண்டு இயங்குவதால் பயிரகளுக்குக் கிடைப்பதற்குப் பதிலாகத் தாற்காலிகமாகப் பறிபோகும் நிலை ஏற்படுகிறது....
அதற்கும் அப்பால் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.
ஆதாவது நன்கு ஆறின புழுதியில் தண்ணீர் பாய்ச்சும்போது மண் பொதுபொதுபாக மாறும்.
அதே சமயம் ஈரமண்ணில் தண்ணீர் பாய்ச்சினால் மண் காயும்போது நிலம் கெட்டிப் படவே செய்யும். அதன்காரணமாக பயிர்களின் வேர்களுக்குக் காற்றோட்டமும் நீரின்மூலம் சத்துக்கள் விநியோகமும் முறையாக இருக்காது......
ஆறின புழுதியில் பயிர் செய்யும்போது களை வெட்டுவது கூடச் சுலபமாக பொருபொருபாக மண் இருக்கும்.
ஆனால் பச்சைபுரட்டிப்[ பயிர் செய்யும் நிலங்களில் களைவெட்டுவதற்குக்கூட மண் கடினமாக இருக்கும்....
இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.......
No comments:
Post a Comment