சீரழியும் தேர்தல்....
நண்பர்களே!
இந்தத் தேர்தல்கள் வரும்போதெல்லாம் பல முறை பார்த்த ஒரு விஷயம்...
ஆதாவது நாடறிந்த பெரிய தலைகள் பிரச்சாரத்துக்கு வரும்போது.....
பல்லாயிரக் கணக்கான மக்கள் கூட்டம்......
பிரம்மாண்டமான விளம்பரங்கள்.......
அளவற்ற வாகனங்கள்.......
தண்ணீராய்ச் செலவழிக்கப்படும் பெட்ரோல், டீசல்....
அவற்றின்மூலம் முறையற்ற விதத்தில் திரட்டப்படும் கும்பல்.....
ஆறாக ஓடும் சாராயம்......
சீரழியும் சுகாதாரம்
.....
இவ்வளவுமாகச் செய்து ஓட்டுச் சேகரிக்கிறார்களாம்!
இப்படியெல்லாம் செய்தால்தான் மக்கள் ஓட்டுப போடுவார்களா?...
இப்படியெல்லாம் செய்து ஒட்டுக் கேட்பவர்கள் மக்கள் தொண்டர்களாக இருக்க முடியுமா?....
ஏன் இதைத் தடை செய்யக்கூடாது?...
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்களின் தகுதியையும் தங்கள் கட்சியின் தகுதிகளையும் இருக்கும் குறைபாடுகளையும் அதற்கான காரணங்களையும் அதற்குத் தங்களின் தீர்வையும் சொல்லி அச்சடிக்கப்பட்ட அறிக்கைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் பொது இடங்களில் வைத்து விட்டு அவரவர் வேலையைப் பார்த்தால் என்ன?...
தேர்தல்நாளன்று அவர்களாகவே விரும்பிச் சென்று வாக்களிப்பது தவிர மற்ற சம்பிரதாயங்களையும் ஆடம்பர செலவுகளையும் தடை செய்தால் என்ன?....
No comments:
Post a Comment