மண்புழு பதினைந்தடி ஆழத்திலிருந்து சத்துக்களை மேலே கொண்டுவந்து பயிருக்குக் கொடுக்கும் என்று சொல்வது உண்மையா?
அப்பட்டமான பொய்!
இயற்கை விதிகளுக்கும் இயற்கைக் கட்டமைப்புக்கும் எதிரானது.
ஆதாவது மண்புழு அவ்வளவு ஆழத்தில் வாழமுடியாது என்பதே உண்மை!
ஆனால் இயற்கை வேளாண்மையின் எதிரிகள் இது போன்ற பல பொய்களைத் திட்டமிட்டே இயற்கை வேளாண்மையின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அதற்குக் காரணம் இருக்கிறது!
இயற்கை வேளாண்மையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து கெடுக்க வழி இல்லை.
காரணம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருக்கிறது. வளர்ந்து வருகிறது.
அதே சமயம் இயற்கை வேளாண்மை சம்பந்தமான ஆழமான புரிதல் இல்லை.
அவரவர் நினைத்ததெல்லாம் இயற்கை வேளாண்மை என்று இப்போது இருக்கிறது.
இந்தநிலையில் இயற்கை வேளாண்மையில் சாத்தியமில்லாததையும் நடக்காததையும் சொன்னால் அதைப் பின்பற்றும் விவசாயிகள் நட்டப்படுவார்கள்.
அப்போது இயற்கை விவசாயம் நமக்கு ஒத்துவராது என்று பழைய ரசாயன விவசாயத்தில் மீண்டும் விழுந்து கிடப்பார்கள்.
No comments:
Post a Comment